'2.0' படத்தின் டிரெய்லர் லான்ச் விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார், ரசூல் பூக்குட்டி, ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் தருணங்கள் இதோ,
மேடையில் ஏறிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம், செலிப்ரட்டிகள் சிலர் வீடியோ மூலம் கேள்வி கேட்டனர். அப்போது அனிருத் 'உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?' என்று கேட்க, 'சூப்பர் ஸ்டார் தான்' என்று ரஹ்மான் பதிலளித்தார். 'ஏன்?' என்று ஆ.ஜே.பாலாஜி கேட்க, "இந்த வயதிலும் அவரோட எஃபோர்ட் தான் காரணம். ஆஸ்கர் வாங்கியாச்சு. நான் நாற்பது வயசுல ரிடையர்ட் ஆகிடலாம்னு நினைச்சேன். ஆனா ரஜினி சாரை பார்த்தேன். அவர் இன்னும் அதே சுறுசுறுப்புடன் இருக்கார்னு என் முடிவை மாத்திக்கிட்டேன்'' என்றார்.
Read More: 2.0 Movie Trailer LIVE UPDATES : அட்வான்ஸ் தீபாவளியாக பட்டையை கிளப்பும் 2.o டிரெய்லர், பஞ்ச் வைத்து பேசிய ரஜினி
பின் மேடையேறிய அக்ஷய குமாரிடம் நடிகர் விஷால் ஃபிட்னஸ் ரகசியம் கேட்க, "நான் ஜிம் வச்சிருக்கேன். 4 மணிக்கே எழுந்து ஒர்க் அவுட் பண்ணுவேன்... ஒருநாள் கூட சூரிய உதயத்தை பார்க்காமல் இருந்ததில்லை" என்று சொன்ன அக்ஷய், விஷாலைப் பார்த்து, 'விஷால் உங்க ஃபிட்னெஸ் பத்தி படிச்சிருக்கேன். உங்க அம்மாவோட சந்தோஷத்துக்காகவாவது வாரத்துல ஒரு நாளாவது டயட் இல்லாமல் நல்லா சாப்பிடுங்க' என்றார்.
'Wow3D' எனும் Screen Guard-ஐ லைக்கா மொபைல் நிறுவனம் அறிமுகம் செய்தது. இது ஸ்மார்ட்போனை 3D-யாக மாற்றுமாம். இதன்மூலம், கண்ணாடி இல்லாமலேயே, 3D-ல் நாம் அனைத்தையும் காண முடியும். விரைவில் இது விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இயக்குனர் ஷங்கர் மேடையில் பேசுகையில், "Dont make movie for ur convenient, tats my tip for movie makers. இப்படி இருந்தா எப்படி இருக்கும்ங்குற கற்பனைதான் இந்த கதை. 2.0 படத்தின் மிகப்பெரிய பலம் ரஜினி சார்தான்" என்றார்.
'3Point0' உருவாக்க என்னிடம் சில ஐடியாக்கள் உள்ளன. எதிர்காலத்தில் அது நடக்கிறதா என்று பார்ப்போம்" என்று அடுத்த பாகத்தின் விதையை ஷங்கர் தூவியிருப்பது ரசிகர்களுக்கு சர்பிரைஸ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில், "இந்தப் படத்திற்கு புரமோஷன் தேவையில்லை. படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இதனை புரமோட் செய்வார்கள். 2.0 பட ஷூட்டிங் தொடங்கியவுடன், எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், ஷங்கரை அழைத்து, 'என்னை விட்டுடுங்க.. வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுத்திடுறேன்' என்றேன். ஆனால், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் என்னிடம் வந்து, '4 மாதம் இல்ல... 4 வருஷம் வேணும்னாலும் ரெஸ்ட் எடுத்துக்கோங்க சார். ஆனால், நீங்க இல்லனா இந்தப் படம் இல்லை' என்றார். அவரைப் போன்ற ஒரு நண்பர் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.