Advertisment

அஜித்துடன் நடிக்க மறுத்த ஷாலினி... கன்வின்ஸ் செய்த தயாரிப்பு நிறுவனம் : அமர்க்களம் ப்ளாஷ்பேக்

அஜித் குமார். 1990-ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற படத்தில் அறிமுகமானார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அஜித்துடன் நடிக்க மறுத்த ஷாலினி... கன்வின்ஸ் செய்த தயாரிப்பு நிறுவனம் : அமர்க்களம் ப்ளாஷ்பேக்

அமர்களம் படத்தில் நடிக்க நடிகை ஷாலினி மறுத்ததாகவும் அவரிடம் பேசி் கன்வின்ஸ் செய்ததாகவும் நடிகர் அஜித் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் அஜித் குமார். 1990-ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற படத்தில் அறிமுகமான அஜித், 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பவித்ரா, ஆசை, வான்மதி, ராசி,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா பில்லா,வரலாறு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வசூலை வாரி குவித்து வருகிறது. இதனிடையே அஜித் அடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

கர்ப்பமான காதலியை திருமணம் செய்ய மறுப்பு : விக்ரம் பட இணை இயக்குனர் மீது புகார்

தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் கடந்த 2000-ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன மற்றும் ஒரு மகள் உள்ளனர். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி, விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும், அலைப்பாயுதே, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் அஜித்துடன் இவர் நடித்த அமர்களம் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படம் முடிந்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அமர்க்களம் படத்தில் நடிக்க முதலில் ஷாலினி மறுத்ததாக அஜித் கூறியுள்ளார்.

1999-ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான படம் அமர்ககளம். இந்த படம் தொடங்கியபோது ஷாலினியை நாயகியாக ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சித்தனர். ஆனால் அப்போது ஷாலினி தான் படிக்க வேண்டும் என்று கூறி அமர்க்கள்ம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஷாலினி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்கிறார். நீங்கள் பேசிப்பாருங்கள் என்று என்னிடம் சொன்னார்கள்.

நான் அவருக்கு போன் செய்து நான் அஜித்குமார் பேசுகிறேன். அமர்க்களம் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர் தான் படிக்க வேண்டும் என்று கூறி மறுப்பு தெரிவித்தார். அதன்பிறகு இதை அப்படியே விட்டுவிட்டோம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து அவரிடம் பேசி கன்வின்ஸ் செய்து நடிக்க சம்மதம் வாங்கினார்கள். அதன்பிறகு அமர்க்களம் படம் உருவானது.

ஒரு நடிகையாக இருந்தாலும் ஷாலினி எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். அதே சமயம் படத்தின் ஸ்கிரிப்ட்களில் தலையிட மாட்டார் என்று சில வருடங்களுக்கு முன்பு ஜெய டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் நடிகர் சந்தானம் அஜித்திடம் கேள்வி கேட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment