இயக்குனர் லோகேஷ் கனகராஜூடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு இடவன் மீது இளம் பெண் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவது விஷ்ணு இடவன். மேலும் மாஸ்டர் படத்தில் பொளக்கட்டும் பற பற, விக்ரம் படத்தில் போர் கண்ட சிங்கம், நாயகன் மீண்டும் வறார் உள்ளிட்ட பாடல்களை எழுதி லோகேஷ் கனகராஜ் படங்களின் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், விஷ்ணு இடவன் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தற்போது அந்த பெண் கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், இருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து இருவரும் நொளம்பூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளனர்.
அஜித்துடன் நடிக்க மறுத்த ஷாலினி… கன்வின்ஸ் செய்த தயாரிப்பு நிறுவனம் : அமர்க்களம் ப்ளாஷ்பேக்
இதனிடையே இந்த பெண்னை திருமணம் செய்ய விஷ்ணு இடவன், மறுத்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் பலமுறை கேட்டும். அவர் தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில் அந்த பெணணிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து சென்னை திருமங்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஷ்ணு இடவனை விசாரணைக்கு அழைத்தனர். இதன்பேரில் நேரில் ஆஜரான அவரிடம் விசாரணை நடந்தது. இது தொடர்பான தற்போது இரு தரப்பிலும் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கு வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“