/tamil-ie/media/media_files/uploads/2023/03/Jailer-Tamannah.jpg)
நடிகை தமன்னா
செல்பி எடுக்க வந்த ரசிகர்களின் கூட்டத்தை பயன்படுத்தி, அத்துமீறியவர்களால் நடிகை தமன்னா டென்ஷனாகி கோபத்தில் கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. பின்னர் சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், பான் இந்தியா படமான பாகுபலியில் தனது நடிப்பு திறமையை தமன்னா வெளிப்படுத்தியிருந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேடி நடித்து வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: கிஸ் பண்றதே இல்லை… 17 வருட பாலிசியை காதலருக்காக கைவிட்ட தமன்னா!
நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் விஜய் வர்மா, கஜோல் ஆகியோருடன் இணைந்து தமன்னா நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸில் நடித்தப்போது தனக்கு விஜய் வர்மா மீது காதல் வந்ததாக தமன்னா தனது காதலை உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு, வெள்ளை நிற உடையில் வந்து கேரள ரசிகர்களை மயக்கினார் தமன்னா. ரசிகர்களை பார்த்து கை அசைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்திய தமன்னா, அவர்கள் முன் உரையாற்றினார். பின்னர் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து தமன்னா அங்கிருந்து கிளம்பினார், அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனையடுத்து, ரசிகர்களுடன் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார் தமன்னா. ஆனால் அப்போது கூடி இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பயன்படுத்தி தமன்னாவிடம் சிலர் அத்துமீறியதாகத் தெரிகிறது. இதனால் டென்ஷனான தமன்னா தொடாமல் இருங்கள் என்று அவர்களிடம் சத்தம் போட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் தமன்னாவிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்று தெரியவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.