’சுயவழி நடப்பவன், சரித்திரம் படைப்பவன்’… துணிவு படத்தின் ‘கேங்ஸ்டா’ பாடல் வெளியீடு
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் மூன்றாவது பாடல் கேங்ஸ்டா வெளியீடு; தெறிக்கும் இசையில், அசத்தல் வரிகளில் வெளியாகியுள்ள பாடலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் மூன்றாவது பாடல் கேங்ஸ்டா வெளியீடு; தெறிக்கும் இசையில், அசத்தல் வரிகளில் வெளியாகியுள்ள பாடலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் மூன்றாவது பாடலாக கேங்ஸ்டா வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய திரைப்படங்களில் ஒன்று அஜீத்குமார் துணிவு. அஜீத்தை புத்தம் புதிய அவதாரத்தில் பார்க்கவும், படம் பற்றிய கூடுதல் அப்டேட்டுகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
துணிவு ஒரு ஆக்ஷன்-த்ரில்லர் படம், இதில் அஜித் குமார் தீவிர புதிய அவதாரத்தில் நடித்துள்ளார். துணிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். எச் வினோத் இயக்கியுள்ள படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜீத் இயக்குனர் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது.
Advertisment
Advertisements
இந்தப் படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து துணிவு படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா பாடல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இரண்டு பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இன்று (டிசம்பர் 25) 3 ஆவது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2 நாட்களுக்கு முன்னர், இந்த 3 ஆவது பாடலின் வரிகள் மட்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பாடல் வரிகளை பார்த்த ரசிகர்கள், பாடலை கேட்கும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்தநிலையில், தற்போது பாடல் வெளியாகியுள்ளது. ஷபீர் சுல்தான் மற்றும் விவேகா எழுதியுள்ள பாடலை, ஷபீர் சுல்தானே பாடியுள்ளார். கூட ஜிப்ரானும் பாடியுள்ளார். நோ கட்ஸ் நோ குளோரி என தொடங்கி, சுயவழி நடப்பவன், சரித்திரம் படைப்பவன் எனும் வரிகளை தெறிக்கும் இசையில் கேட்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.