Advertisment

Bigg Boss Tamil 3: பயங்கரமா சண்டை போட்டுட்டு, பவ்யமா ‘சாரி’ கேட்ட வனிதா

Bigg Boss Tamil 3: தங்களால் விளையாட முடியவில்லை எனக்கூறி வனிதாவும், மோகனும் பின்வாங்கி விட்ட நிலையில், அடுத்தவார தலைவராக சாக்‌ஷி தேர்வானார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 day 84, 15.09.19,

Bigg Boss Vanitha Vijayakumar

Bigg Boss Tamil 3 - Day 19: முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது என்றே சொல்லலாம். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். கடந்த வாரம் முதல் ஆளாக ஃபாத்திமா பாபு எலிமினேட் செய்யப்பட்டார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 19-வது நாளான நேற்று, கொடூரக் கொலையாளி டாஸ்க்கில் சிறப்பாக விளையாண்டதற்காக வனிதா, மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி அடுத்தவார தலைவர் போட்டிக்கு நாமினேட் செய்யப்பட்டனர். இந்த டாஸ்க்கை சரியாக செய்யாததற்காக சேரனும், கவினும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Bigg Boss Tamil 3: முதல்ல ஜெயிலுக்கு போகப் போறது யாரா இருக்கும்?

லாஸ்லியா அனைவருக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கக் கற்றுக் கொடுத்தார். பிறகு அடுத்த வார தலைவருக்கான டாஸ்க் நடந்தது. அதில் தங்களால் விளையாட முடியவில்லை எனக்கூறி வனிதாவும், மோகனும் பின்வாங்கி விட்ட நிலையில், அடுத்தவார தலைவராக சாக்‌ஷி தேர்வானார்.

டாஸ்க் மீது ஏற்பட்ட அதிருப்தியில் வனிதாவுக்கும் தர்ஷனுக்கும் காரசார விவாதம் நடந்தது. இதனால் கோபமான வனிதா தன்னுடைய மைக்கை தூக்கி வீசியவாறு, பிக்பாஸிடம் பேச வேண்டும் என்று முறையிட்டார். ஆனால்  அவருடைய கோரிக்கையை பிக்பாஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் அவரே சமாதானம் அடைந்து மைக்கை மீண்டும் எடுத்துக் கொண்டார்.

பின்னர் வெளியில் வந்த அவர், மற்ற போட்டியாளர்களுடன் அமர்ந்திருந்த தர்ஷனிடம் தனது நிலைமையை விளக்கிக் கூறி, சாரி சொன்னார். வீட்டின் புதிய தலைவியான சாக்‌ஷி புதிய அணிகளை பிரித்தார்.

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment