Advertisment

நீ விட்டுக் கொடுக்குறத நான் ஏத்துக்கணுமா? - கடுப்பான லாஸ்லியா

Bigg Boss Tamil 3, Episode 78 Written Update: நாமினேஷனிலிருந்து தப்பிப்பதற்காகவே போட்டியாளர்கள் இந்த கேப்டன்சி டாஸ்க்கை செய்வதாகவும், இதில் உண்மை இல்லை என்றும் வனிதா கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 day 78, 09.09.19,

Bigg Boss Tamil 3 day 78, 09.09.19,

Bigg Boss Tamil 3 Episode 78: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வனிதா, ஷெரின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகென் மற்றும் கவின் என மொத்தம் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். நடந்து முடிந்த எலிமினேஷனில், சேரன் வெளியேற்றப்பட்டு, ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது உள்ளே இருக்கும் 7 பேருக்கும் தெரியாது.

Advertisment

’இப்போ தான் போட்டிய புரிஞ்சிக்கிட்டேன்’ – சேரனுக்கு பதிலளித்த வனிதா!

78-ம் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டில் இந்தவார தலைவருக்கான போட்டி நடந்தது. வனிதா, தர்ஷன், லாஸ்லியா ஆகிய மூவரும் தலைவருக்கான நாமினேஷனில் இருந்தனர். நாமினேஷனிலிருந்து தப்பிப்பதற்காகவே போட்டியாளர்கள் இந்த கேப்டன்சி டாஸ்க்கை செய்வதாகவும், இதில் உண்மை இல்லை என்றும் கூறிய வனிதா, இந்த கேப்டன்சி டாஸ்க்கில் கலந்துக் கொள்ள விருப்பமில்லை என்றார். ஆனால் அதை பிக் பாஸ் அனுமதிக்கவில்லை. ஆகையால் போட்டியில் கலந்துக் கொண்டு, தன்னால் முடியவில்லை எனக் கூறி, வெளியேறினார். சற்று நேரத்தில் கால் வலிப்பதாகக் கூறி தர்ஷனும் வெளியேற, இந்த வார தலைவரானார் லாஸ்லியா. இருப்பினும், மற்றவர்கள் விட்டுக்கொடுத்து நீ ஜெயிப்பது எப்படி உனக்கு பிடிக்காதோ, அதே போன்றுதான், நீ விட்டுக்கொடுத்து நான் ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை என்று தர்ஷனுடம் கூறினார்.

சீக்ரெட் ரூமுக்குள் சேரன்: போட்டியாளர்களின் உண்மை முகத்தை தெரிந்துக்கொள்ள வாய்ப்பு?

பின்னர், இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸ் நடந்தது. இதில், ஏற்கனவே கவின் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டதால், அவரின் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. நாமினேஷனின் இறுதியில், வனிதா, கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் ஆகிய ஐந்து பேரும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மியூஸிக்கல் சேர் போன்றதொரு விளையாட்டை போட்டியாளர்கள் விளையாடினர். மியூசிக் போடப்படும் போது, பந்தை மற்ற போட்டியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இறுதியில், பந்து யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சீட்டை எடுத்து, அதில் எழுதப்பட்டிருப்பதை யாராவது ஒரு போட்டியாளரை செய்ய வைக்க வேண்டும். இதில், தோற்ற போட்டியாளர் சேரை எடுத்துக் கொண்டு வெளியில், சென்றுவிட வேண்டும்.

இதில் முதலாக அவுட்டான சாண்டி ஒரு லிட்டர் ஐஸ்கிரீமை லாஸ்லியாவை சாப்பிட வைத்தார். வனிதா கொடுத்த, உப்புக் காப்பியை தர்ஷன் குடித்து முடித்தார். போட்டியாளர்களின் இன்றைய செயல்பாடுகள் முழுவதையும், ரகசிய அறையிலிருந்து வேடிக்கைப் பார்த்தார் சேரன். அப்போது, காதல் விவகாரம் பற்றி இனிமேல் இங்கு பேச மாட்டேன் என்று கூறிய கவின், இப்போது அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்” என்று ஆடியன்ஸைப் பார்த்துக் கூறினார்.

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment