Advertisment

கிடைச்ச வரைக்கும் லாபம்: 5 லட்சத்தோடு நடையைக் கட்டிய கவின்!

Bigg Boss Tamil 3, Episode 94 Written Update: ரூ.5 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு இந்தப் போட்டியில் இருந்தும், வீட்டை விட்டும் வெளியேறுவதற்கு போட்டியாளர்களான உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 day 94, 25.09.19,

Bigg Boss Tamil 3 day 94, 25.09.19,

Bigg Boss Tamil 3 Episode 94: பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷன், முகென், சாண்டி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே போட்டியில் இருக்கிறார்கள். இதில் முகென் கோல்டன் டிக்கெட் பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகி விட்டார்.

Advertisment

வீட்டை விட்டு வெளியேறிய கவின்: வெளியேறத் துடிக்கும் லாஸ்லியா!

நேற்றைய நிகழ்ச்சி நடிகர் விஜய்யின் ’நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற ”வெறித்தனம்” பாடல் போடப்பட்டது. இந்தப் பாடலுக்கு போட்டியாளர்கள் எனர்ஜியுடன் நடனமாடினார்கள். பின்னர் தனக்காக ஷெரின் மறைத்து மறைத்து எழுதி கிழித்துப் போட்ட லெட்டரை குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து ஒட்ட வைத்து படித்துத் தெரிந்துக் கொண்டார் தர்ஷன். பிறகு, தனக்குரிய லெட்டரை கொடுக்கும்படி ஷெரினிடம் கேட்க, தான் அதை கிழித்துப் போட்டுவிட்டதாகத் தெரிவித்தார் ஷெரின். பின்னர் லெட்டரில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வரியை தர்ஷன் கூற, அதிர்ச்சியடைந்த ஷெரின் தர்ஷன் மீது கோபம் கொண்டார்.

”நீ ஏன் அத படிச்ச. அது என்னோட தனிப்பட்ட ரகசியம். ஏன் அப்படி செஞ்ச” என தர்ஷனிடம் கேட்டார் ஷெரின். வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட தர்ஷன், பின்னர், ஷெரினிடம் சென்று தான் அதனை எடுத்து ஒட்ட வைத்து படித்ததாக ஒப்புக்கொண்டார். ”எனக்காக எழுதிய லெட்டரை நான் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீ குளிக்கச் சென்ற போது எடுத்து படித்தேன்” என்றார். ”இதை என்னிடம் தனியாக சொல்லியிருக்கலாம். மற்ற போட்டியாளர்கள் முன்பு கூறியது தான் வருத்தமாக இருக்கிறது” என்று தர்ஷனிடம் கூறினார் ஷெரின்.

”மேகமூட்டத்தின் சூரிய ஒளி நீ” – தர்ஷனுக்கு ஷெரின் எழுதிய கடிதம்!

இதைத் தொடர்ந்து தர்ஷனுக்கு வழங்கப்பட்ட மன்னர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் மற்ற போட்டியாளர்களுக்கு தர்ஷன் பணிவிடைகள் செய்தார். குறிப்பாக ஷெரின் மேக்கப் போடுவதற்கு உதவி செய்தார். பின்னர் நடந்த வளையத்திற்குள் இருக்கும் பந்தை எடுக்கும் டாஸ்க்கில் லாஸ்லியா வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த சீசனில் போட்டியாளர்களாகக் கலந்துக் கொண்ட ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். முதலில் ”இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் டிரைலர் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் ”வேழம்” படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

பின்னர் ”ஒருவர் மட்டுமே இந்தப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.50 லட்சம் பெற முடியும். இதனிடையே ரூ.5 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு இந்தப் போட்டியில் இருந்தும், வீட்டை விட்டும் வெளியேறுவதற்கு போட்டியாளர்களான உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது” என்று பிக் பாஸ் கூறினார். இதனைக் கேட்ட போட்டியாளர்கள் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், கவின் மட்டும் எழுந்து நின்றார். இதனைக் கண்ட லாஸ்லியாவும், சாண்டியும் அதிர்ச்சியடைந்தனர்.

”ஏய், நீ என்னடா காமெடி பண்ணிக்கிட்டு இருக்க. இப்போ நீ எதுக்கு எழுந்த” என்று சாண்டி கேட்க, மறுபுறம் லாஸ்லியாவோ ”எங்க எல்லோருக்கும் காரணத்தை சொல்ல வேண்டும். முதலில் என்ன காரணம் என்று எங்களுக்கு சொல்லு” என்றார். இதற்கு கவின் ”கொஞ்சம் வெயிட் நான் சொல்றேன்” என்று கூறிவிட்டு, ”தல நான் வெளியேற ரெடி” என்று கூறினார். வழக்கம் போல் இந்த ட்விஸ்டுடன் நிகழ்ச்சி முடிந்தது.

உண்மையில் கவின் வீட்டை விட்டு வெளியேறினாரா அல்லது சுவாரஸ்யத்திற்காக இப்படி காட்டினார்களா என பார்வையாளர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே நமக்கு வந்த நம்பத் தகுந்த வட்டாரத்தின் தகவலின் படி, கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருப்பது உறுதியாகியிருக்கிறது!

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment