Advertisment

உக்ரைன் போர்: பாலிவுட் பிரபலங்கள் கவலை.. மேலும் சினிமா செய்திகள்

நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும் என்கிறார் பிரபல பாடலாசிரியர்.

author-image
WebDesk
New Update
உக்ரைன் போர்: பாலிவுட் பிரபலங்கள் கவலை.. மேலும் சினிமா செய்திகள்

நான் போரை வெறுக்கிறேன்: கவிஞர் வைரமுத்து

Advertisment

நான் போரை வெறுக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘’நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும் ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும். ரஷ்யா மீது ஜி7 நாடுகளின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் நான் போரை வெறுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த், விஜய் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்த வலிமை

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியானது.

முதல் நாளில்  ‘வலிமை’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.36 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னையில் மட்டுமே ரூ.1.82 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘அண்ணாத்த, மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை நஸ்ரியா

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானியின் பிறந்த நாளையொட்டி (பிப்.24) மலையாள நடிகை நஸ்ரியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் நானி நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் படம் கடந்த டிசம்பரில் வெளியானது.

அதை தொடர்ந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தற்போது நானி நடித்துள்ள படம் அன்டே சுந்தரானிகி.. இந்தப் படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

நடிகை நஸ்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.



இந்தநிலையில் நேற்று நானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நஸ்ரியா, தாங்கள் இருவரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

புதிய படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய பிரபல இயக்குநர்

மலையாளத்தில் மிகவும் முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் கூமன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்துக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஜீத்து ஜோசப் திரிஷ்யம், திரிஷ்யம் 2, மெமரீஸ் ஆகிய படங்களை இயக்கியவர். தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து பாபநாசம் படத்தை இயக்கியவரும் இவரே.

திரிஷ்யம் படத்தின் ரீமேக் தான் பாபநாசம். இந்நிலையில் கூமன் படத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஆசிஃப் அலி கதாநாயகனாக நடித்துள்ளார்.

உக்ரைன் போர்: பாலிவுட் பிரபலங்கள் கவலை

ரஷ்யாவும் உக்ரைனும் இடையே நடைபெற்று வரும் போர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளன.

உக்ரைனில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் இருந்து இந்திய குடிமக்கள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், பாலிவுட் பிரபலங்கள் உக்ரைன் நாட்டில் வாழும் மக்கள் குறித்து கவலை தெரிவித்ததோடு, அமைதிக்கான நம்பிக்கையையும் தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

நாங்க வேற.. வேற.. வேற மாறி..!’ அஜித் லேட்டஸ்ட் பாட்டுக்கு கண்ணம்மா ரோஷினி துள்ளல் டான்ஸ்

அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், உக்ரைனில் நிலவி வரும் நிலைமை பயங்கரமானது., ​​அப்பாவி மக்கள் தங்கள் உயிருக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்களின் உயிருக்காகவும் பயத்தில் வாழ்கின்றனர்.

நவீன உலகில் இது எப்படி இவ்வளவு பேரழிவு நிலைக்கு செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம், ஆனால் இது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் ஒரு விளைவாகும்.

இந்தப் போர்க்களத்தில் அப்பாவி உயிர்கள் வாழ்கின்றன. அவர்களும் உங்களைப் போன்றவர்கள். உக்ரைன் மக்களுக்கு எப்படி உதவுவது என்பது பற்றிய கூடுதல் தகவல் எனது பயோவில் உள்ள இணைப்பில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார்.

எனது எண்ணங்கள் முழுவதும் உக்ரைன் குறித்து உள்ளது. கூடிய விரைவில் அமைதி திரும்பட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment