இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவுள்ளார் தெலுங்கு இளம் நடிகர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்தாகி பிரிந்தவர்.
Advertisment
இயக்குநர் வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் மூலம் சிறந்த கம்பேக் கொடுத்தார். அவரது இயக்கத்தில் மன்மத லீலை படபும் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
நடிகர் அஜித்தை வைத்து மற்றொரு படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த வேளையில் நாக சைதன்யாவை அவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
'பீஸ்ட்' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் : தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தல்
நடிகர் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட்டால் அசாதாரண சூழல் ஏற்படும். இதனால் அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நான் விஜய் ரசிகன் தான்-பிரபல பாலிவுட் நடிகர்
'பீஸ்ட் 'படத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இயக்குநர் அட்லியை போல நானும் விஜய் ரசிகன் தான் .'பீஸ்ட்' படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். டிரைலர் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஷாருக் கான் இயக்குநர் அட்லி படத்தில் நடித்து வருகிறார்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் நடனமாடிய இயக்குநர் ராஜமெளலி
ஆர்.ஆர்.ஆர் திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமவுலி நடனமாடிய காட்சிகள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையரங்கில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இந்த நிலையில், விநியோகம் செய்திருத்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு ஐதராபாத்தில் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி "நாட்டு நாட்டு" பாடலின் ஸ்டெப்பை போட்டு ராஜமவுலி நடனமாடி உற்சாகமடைந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil