கோவிலில் தீண்டாமையை எதிர்க்கொண்ட யோகி பாபு? வைரலாகும் வீடியோ காட்சிகள்

கோவிலில் கைக் கொடுக்க மறுத்த அர்ச்சகர்; தீண்டாமையை எதிர்க்கொண்டாரா நடிகர் யோகி பாபு? வைரல் வீடியோ காட்சிகள்

கோவிலில் கைக் கொடுக்க மறுத்த அர்ச்சகர்; தீண்டாமையை எதிர்க்கொண்டாரா நடிகர் யோகி பாபு? வைரல் வீடியோ காட்சிகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yogi Babu

கோவிலில் கைக் கொடுக்க மறுத்த அர்ச்சகர்; தீண்டாமையை எதிர்க்கொண்டாரா நடிகர் யோகி பாபு? வைரல் வீடியோ காட்சிகள்

நடிகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு கோவிலில் அர்ச்சகர் ஒருவர் கை கொடுக்க மறுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட்டில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் நடித்திருக்கிறார் யோகி. மேலும், தோனி தயாரித்த முதல் படமான எல்.ஜி.எம் படத்திலும் நடித்திருக்கிறார். தமிழில் சிலப் படங்களில் முதன்மைக் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இப்படி கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிசியாக நடித்து வருகிறார் யோகி பாபு. கையில் டஜன் கணக்கான படங்களை வைத்திருக்கும் யோகி பாபுவின் கால்சீட் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்: பிரபல தென்னிந்திய நடிகை ஓபன் டாக்!

இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகிபாபு, தீண்டாமை கொடுமையை எதிர்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகிபாபு முருகன் மீது அதீத பக்தி கொண்டவர். இதனால் முருகன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார் யோகிபாபு. அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisment
Advertisements

சாமி தரிசனம் முடிந்து அங்குள்ள அர்ச்சகர் ஒருவரை பார்க்க சென்ற யோகிபாபு, அந்த அர்ச்சகருக்கு கை கொடுக்க கையை நீட்டினார். ஆனால் அந்த அர்ச்சகரோ, யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது. முன்னணி நகைச்சுவை நடிகருக்கே இப்படி ஒரு தீண்டாமை கொடுமை நடந்துள்ளதா என ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள யோகி பாபு, அர்ச்சகர் ரொம்ப நல்லவர், அவரிடம் நான் கைகுலுக்க செல்லவே இல்லை, டாலர் குறித்து தான் கேட்டேன், அதற்கு அவர் விளக்கம் அளித்தார். பின்னர் இருவரும் அமர்ந்து நிறைய பேசினோம் என கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Yogi Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: