அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா மற்றும் அனுராக் கஷ்யப் நடித்த இமைக்கா நொடிகள் படம் முதல் நாளே 11 லட்சம் வசூலித்துள்ளது.
இமைக்கா நொடிகள் : நொடிக்கு நொடி ஆக்ஷன்:
சிபிஐ அதிகாரி அஞ்சலியாக நடித்துள்ள நயன்தாரா, ஒரு சைக்கோ கொலைக்காரனை பிடிக்கும் வேட்டையில் இறங்குகிறார். ருத்ரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அனுராக் கஷ்யப் தான் இப்படத்தில் வில்லன்.
இமைக்கா நொடிகள் படத்தில் ருத்ராவாக அனுராஜ் கஷ்யப்
முதலில் பணத்திற்காக பலரை கடத்துகிறார் ருத்ரா. பின்பு பணம் கைக்கு வந்த பிறகு அவர்களை கொடூரமாக கொலை செய்கிறார். இவ்வாறு கடப்படும் ஒவ்வொருவரும் சடலமாகவே கண்டெடுக்கப்படுகின்றனர்.
இப்படத்தை அந்த 4 காரணங்களுக்காக கட்டாயம் பார்க்க வேண்டும்..!
இந்த கொலைகளை செய்யும் ருத்ராவை பிடிக்கும் பணியில் இறங்குகிறார் அஞ்சலி. இந்த வேட்டையில் திடீரென கொலை குற்றவாளி அதர்வா தான் என்று காவல்துறை முடிவு செய்து அவரை துரத்த தொடங்குகிறது. சைக்கோ கில்லர் ருத்ராவை பிடிக்கும் பணியில் திடீரென அதர்வா ஏன் இழுக்கப்பட்டார், என்ன பிண்ணனி என்பதே இந்த கதை.
![imaikka nodigal , இமைக்கா நொடிகள்](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2018/09/imaikka-nodigal-4.jpg)
இந்த படம் கடந்த 30ம் தேதி காலையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரவு காட்சியே வெளியானது. இருப்பினும், அன்று இரவே சென்னை முழுவதும் இப்படம் 11 லட்சம் வசூலை எட்டியது. கோலமாவு கோகிலாவை தொடர்ந்து இமைக்கா நொடிகள் அடுத்த வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கிறது.
படத்தில் பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கும் அனுராக் கஷ்யப் நடிப்பில் அனைவரையும் அதிர வைத்திருக்கிறார். நயன்தாராவிற்கு அடுத்ததாக இப்படத்தில் அனுராக் கஷ்யப்பிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ரசிகர்கள் பார்வையில் இமைக்கா நொடிகள் :
August 2018