Advertisment

பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட லஷ்மன் ஸ்ருதி ராமன்: முதல் கட்ட விசாரணையின் முடிவு

நேற்று தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இசை நிகழ்ச்சியை அவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lakshman Sruthi owner suicide

Lakshman Sruthi owner suicide

Lakshman Sruthi owner commits suicide : தமிகழகத்தில் பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் உரிமையாளர்கள் ராமன் - லஷ்மன் சகோதரர்கள்.

Advertisment

இதில் ராமன் அவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராமன் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கடும் உடல்நலக் குறைவால் ராமன் பாதிக்கப்பட்டதாகவும், நேற்று தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இசை நிகழ்ச்சியை அவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதோடு, நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், இன்று தற்கொலை செய்திருப்பது, இசையுலகில் பெரும்  அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் இப்படியான விபரீத முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு இறந்து போன ராமன் நீண்ட காலமாக சர்க்கரை நோய், இதய அடைப்பு, மூலம் போன்ற பல வியாதிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார் எனவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்க கூடும் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment