'அஞ்சலி பாப்பா' இப்போ எவ்ளோ பெரிய ஓவியர் தெரியுமா? சென்னை கண்காட்சிக்கு மணிரத்னம், ஏ.ஆர் ரகுமான் வருகை

ஓவியராக மாறிய நடிகை ஷாமிலி; சென்னை கண்காட்சிக்கு படையெடுக்கும் பிரபலங்கள்; ரசிகர்கள் வாழ்த்து

ஓவியராக மாறிய நடிகை ஷாமிலி; சென்னை கண்காட்சிக்கு படையெடுக்கும் பிரபலங்கள்; ரசிகர்கள் வாழ்த்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shamlee Mani Suhasini

ஷாமிலி ஓவிய கண்காட்சியில் மணிரத்னம் மற்றும் சுஹாசினி

நடிகை ஷாமிலி தான் வரைந்த ஓவியங்களைக் காட்சிப்படுத்திய ஓவியக் கண்காட்சியில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

Advertisment

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாமிலி. தமிழ் சினிமாவில் ‘ராஜ நடை’ படத்தின் மூலம் அறிமுகமானவர், மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் அஞ்சலி பாப்பாவாக நடித்து பிரபலமானார். இவர் நடிகர் அஜித் குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினியின் தங்கை தான்.

இதையும் படியுங்கள்: உதவி இயக்குனர்களை அடித்து உதைக்கிறேனா? மாரி செல்வராஜ் விளக்கம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பின்னர் ‘ஒய்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீர சிவாஜி’ என்ற படத்தில் நடித்தார்.

Advertisment
Advertisements
publive-image

நடிப்பை தொடர்ந்து வந்தாலும், தனது தனி திறமையை வளர்க்க முடிவெடித்த ஷாமிலி, ஓவியம் வரைவதில் முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வந்தார். பிரபல ஓவியர் ஏ.வி இளங்கோவனிடம் முறைப்படி ஓவிய நுணுக்கங்களை கற்று அறிந்தார். ஓவியத் துறையில் நாட்டம் அதிகமாக அதில் தனது முழு கவனம் செலுத்தி ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.

publive-image

ஷாமிலியின் ஓவியப் படைப்புகள் துபாயில் வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் ஓவிய சர்வதேச கலைக் கூடத்தில் வைக்கப்பட்டது. 60 நாடுகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துக் கொண்ட நிகழ்வில் நடிகை ஷாமிலியும் கலந்து கொண்டு சிறப்பு பெற்றார். இதையடுத்து அவரது வண்ணமயமான அசாதாரணமான ஓவியங்கள் பாராட்டுகள் பெற்று கவனம் பெற தொடங்கியது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை ஃபோக்கஸ் ஆர்ட் கேலரியில் தற்போது ஷாமிலி தனது ஓவியங்களை SHE என்ற தலைப்பில் கண்காட்சியாக அமைத்துள்ளார். இந்த கண்காட்சிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், இயக்குனர்கள் மணிரத்னம், கிருத்திகா உதயநிதி, இயக்குனர் விஷ்ணு வர்தன், கலை இயக்குனர் தோட்டா தரணி, நடிகர்கள் மிர்ச்சி சிவா, அர்ஜுன், சுஹாசினி, ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு ஷாமிலியின் திறமையை பாராட்டினர். மேலும் இவர்களுடன் அவரது நடிகை ஷாலினி அவரது மகன், மகள்கள் ஆகியோரும் கலந்து கொண்டு ஓவியங்களை கண்டுகளித்தனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுடன் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maniratnam A R Rahman Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: