Advertisment

அரவிந்துடன் விவாகரத்து: இன்னொரு திருமணம் செய்துக் கொள்கிறாரா தாமரை?

Aravind-Thamarai: மாயனும் தேவியும், புது மாப்பிள்ளையை கடத்தி தாமரையின் திருமணத்தை நிறுத்தலாம் என திட்டம் தீட்டுகிறார்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Naam Iruvar Namakku Iruvar Serial aravind thamarai mayan devi

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்

Naam Iruvar Namakku Iruvar: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு  சிறுசு முதல் பெருசு வரை அப்படியொரு ரசிகர் பட்டாளம்.

Advertisment

இதில் டாக்டர் அரவிந்தும், படிக்காத காமெடி ரவுடி மாயனும் இரட்டை சகோதரர்கள். இதில் பிறந்ததுமே குழந்தையில்லாத தம்பதிக்கு தத்து கொடுக்கப்படுகிறான் அரவிந்த். இருப்பினும் இந்த உண்மை அவனது 30 வயதில் தெரிய வருகிறது. சந்தன பாண்டியின் மூத்த மனைவியின் மகள் தேவி நன்றாக படித்தவள். இரண்டாம் மனைவியின் மகள் தாமரை படிக்காத கிராமத்துப் பெண். அரவிந்துக்கும் தாமரைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, முகூர்த்தத்திற்கு முன்பு தாமரையின் மாமா மச்சக்காளை, அம்மா பார்வதியால் கடத்தப்படுகிறார். இதனால் அரவிந்த் தாமரையை திருமணம் செய்துக் கொள்ள, டாக்டர் வேடமிட்டு தேவியை கரம் பிடிக்கிறார் மாயன்.

திரைக்கதையில் மணக்கும் ரோஜா: பிரியங்காவை காப்பாற்றுவாரா சிபு?

இதற்கிடையே தாமரையை அரவிந்த்தின் அம்மா கெளரியும், மாயனை தேவி குடும்பத்தாரும் நிராகரிக்கிறார்கள். ஆகவே இந்த 2 ஜோடியும் விவாகரத்து செய்துக் கொள்ள முடிவெடுக்கிறது. முதற்கட்டமாக தற்போது அரவிந்த் - தாமரை இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது. தாமரை மீது அதிக அன்பு இருந்தாலும், அம்மாவின் மனம் கோணாமல் நடந்துக் கொள்ள வேண்டுமென எண்ணிய அரவிந்த், விவாகரத்து செய்துக் கொள்ள சம்மதம் என கோர்ட்டில் தெரிவிக்கிறார்.

இதைக்கேட்டு உடைந்து போகிறாள் தாமரை. ’முதலில் அத்தைக்கு பிடிக்காமல் போனது. இப்போது அத்தையும் ஏத்துக்கிட்டாங்க. விவாகரத்துக்கு விருப்பமில்லைன்னு ரெண்டு பேரும் எழுதிக் கொடுத்தோமே? இவர் எதற்கு இப்போது சம்மதம் சொல்கிறார்?’ என்கிற கேள்விகள் தாமரையை உறைய வைத்தது.

விவாகரத்துக்குப் பிறகு வேறொரு மாப்பிள்ளையை அழைத்து வருகிறார் தாமரையின் மாமா. இனி உங்கள் விருப்பம், என ஒற்றை வரியில் பதிலளிக்கிறாள் தாமரை. தாமரைக்கு வரன் பார்த்திருக்கும் விஷயத்தை மாயனிடம் தெரிவிக்கிறாள் தேவி. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, அரவிந்த் - தாமரையை ஒன்று சேர்க்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம்.

ஈரமான ரோஜாவே: மலரின் குடும்பம் அந்த அவமானத்தில் இருந்து மீண்டு வருமா?

விஷயத்தைக் கேள்விப்பட்ட மாயன், அரவிந்த் வீட்டிற்கு வந்து தாமரையின் இரண்டாம் திருமணத்தைப் பற்றி அனைவரிடமும் சொல்கிறான். அதற்கு, ‘அவ நல்லவ, அவளுக்கு நான் பொருத்தமான ஆள் இல்ல’ என்கிறான் அரவிந்த். பின்னர் மாயனும் தேவியும், புது மாப்பிள்ளையை கடத்தி தாமரையின் திருமணத்தை நிறுத்தலாம் என திட்டம் தீட்டுகிறார்கள்.

தாமரை இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வாளா என்பதை இனி வரும் எபிசோட்களில் பார்ப்போம்!

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment