vijay tv show: விஜய் டிவியின் நீயா நானா ரியாலிட்டி ஷோவில் இயக்குநர் சமுத்திர கனி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். ஹவுஸ் ஹஸ்பெண்ட் குறித்த விவாதத்தை வழக்கம்போல நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். ஒரு சமூகம் குடும்பத்தில் இருந்துதான் உருவாகிறது...இதனால் ஹவுஸ் ஹபெண்டாக இருந்து குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று விவாதம் முன் வைக்கப்பட்டது,.
அப்போது பேசிய சமுத்திர கனி, குடும்பத்தில் ரெண்டு பேரும் ஓ டி ஓடி சம்பாதிப்பாங்க. குழந்தையை யார்கிட்டேயாவது விட்டு பார்த்துக்க சொல்வாங்க. எதுக்கு இப்படி ரெண்டு பேரும் நேரமின்றி வேலை பார்த்து சம்பாதிக்கிறீங்க என்று கேட்டால், குழந்தையின் மகிழ்ச்சிக்காக..எதிர்காலத்துக்காக என்று சொல்வார்கள். ஆனால், குழந்தை எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால், நிறைய சம்பாதிக்கும் மனைவி வேலைக்கு போனால், கணவர் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருப்பதில் தவறு இல்லை. குழந்தை வளர்ப்பு மிகவும் முக்கியம்...
ரெண்டு நாள் நான் என் குழந்தைகளோடு இருந்தேன்... ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றும் கூறினார் சமுத்திர கனி. இயக்குநர் சமுத்திர கனி ஆரம்ப காலங்களில் படங்களை இயக்கி வந்தவர், இப்போது நடிப்பதோடு நிறுத்திக்கொண்டு இருக்கிறார். சாட்டை, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் கேரக்டருக்கு ஏற்ப அதிகம் கருத்து சொன்னவர் சமுத்திர கனி.
பாண்டவர் இல்லம் காதல் இப்படி தான்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil