Arya's next with P.Ranjith : இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் ஆர்யா. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வெகு தீவிரமாக உடற்பயிற்சி செய்து, தனது உடலை கட்டு கட்டாக மாற்றியிருக்கிறார். ஆகையால் ரஞ்சித்தின் படத்தில் வட சென்னையைச் சேர்ந்த பாக்ஸராக ஆர்யா நடிப்பார் என்று தெரிகிறது.
நடிகர் தனுஷ்க்கு தலை இருக்காது – கொலைமிரட்டலால் பரபரப்பு
அதோடு தனது ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு, “ரஞ்சித் சாரின் படத்திற்கு தயாராகி விட்டேன். விளையாட்டு மீதான என் காதல் உயிர் பெற்று திரையில் வரவிருக்கிறது. ரஞ்சித் சாரின் அடுத்தப் படத்தில் பாக்ஸர்களை எதிர் கொள்கிறேன். இந்தப் படம் எனது திரை வாழ்க்கையில் மிகவும் சவாலானது. அனுபவத்தை நேசிக்கிறேன். ரஞ்சித் சார் தனித்துவமானவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் இயக்குநராக அன்பு அறிவு பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கு ’சல்பேட்டா பரம்பரை’ என்று பெயரிடப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த டைட்டில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மகா சிவராத்திரி : ஈஷா மையத்திற்கு வருகை புரிகிறார் குடியரசு துணைத் தலைவர்!
இந்தத் திரைப்படம் ஆர்யாவின் 30-வது படமாக இருக்கும். காப்பான் மற்றும் மாகமுனி வெளியான பிறகு, மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் ஆர்யா. ரஞ்சித்திற்கு 2018-ல் ‘காலா’ வெளியானது. இந்நிலையில் அவரது அடுத்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தவிர, ’டெடி’ படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அதில் அவரது மனைவி சாயிஷா, ஹீரோயினாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.