Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியல் பல திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. 2 குழந்தைகளுக்குப் பிறகு மனைவியை இழந்த துரைசிங்கமும், வயிற்றில் குழந்தையுடன் காதல் கணவனை இழந்த ரோஜாவும், இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சீரியலில் அம்மா, நிஜத்தில் படு இளமையான நடிகை: பிரவீணா ப்ரமோத்!
துரைசிங்கத்தின் தாய் மாமன் மகள் ஐஸ்வர்யா அவரை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என அந்த திருமணத்தை நிறுத்த, பல தில்லு முல்லு வேலைகளை செய்து வருகிறார். ரோஜாவை கடத்துகிறாள். ஆனால் ரோஜாவின் தோழி சந்தியாவோடு இணைந்து துரைசிங்கம் அவளை காப்பாற்றி விடுகிறார்.
சிறப்பு விருந்தினராக நடிகர் பாக்யராஜ் கலந்துக் கொண்டு, துரை சிங்கம் - ரோஜா நிச்சயதார்த்ததை நடத்தி வைத்தார். அப்போது MR அண்ட் MRS சின்னத்திரை ஜோடிகள் நடனம் ஆடி, அவர்களது வாழ்த்துக்களை தெரிவிக்க, மூக்குத்தி முருகனும் அவர்களுக்காக பாடி, ஓவியம் வரைந்து சிறப்பித்தார்.
துரைசிங்கத்தின் மூத்த மகள் கனியிடம் இல்லாதது பொல்லாததை பேசி மனதை கலைக்கிறார் ஐஸ்வர்யாவும் அவரது அம்மாவும். அங்கு வரும் கனியின் அத்தையும், பாட்டியும் அவர்களை திட்டி, அனுப்பினார்கள். அவர்களை நம்ப வேண்டாம் இந்த திருமணம் நடைபெறுவது நல்லதற்கே என கூறுகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே அப்பா ரோஜாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டுமென இளையமகள் கயலும், வேண்டாம் என மூத்த மகள் கனியும் நினைக்கிறார்கள். தற்போது ஒருவழியாக அப்பாவின் கல்யாணத்துக்கு கனி பச்சைக் கொடி காட்டுகிறாள். ”நீங்க கல்யாணம் பண்ணிக்கங்க அப்பா” என துரை சிங்கத்தை கட்டியணைக்கும் கனி, “உங்களுக்கு குழந்தைங்கன்னா, அது நானும் கயலும் தான் பா. உங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறந்தா அத என்னால ஏத்துக்க முடியாதுப்பா” என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள் கனி.
சாப்பாடு பரிமாறுவதில் வெடித்த சண்டை: பிக் பாஸ் ப்ரோமோ
ஆனால் ரோஜாவோ அன்புவின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். இந்த உண்மை துரை சிங்கத்துக்கு தெரியும். ஆனால் குடும்பத்துக்கு தெரியாது. இந்த விஷயம் வெளியில் தெரிய வரும் போது, அதுவும் கனிக்கு தெரிய வரும் போது எப்படி இருக்கும்? தொடர்ந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”