Advertisment

சீமராஜா தான் சிவகார்த்திகேயன்; வண்டலூர் பூங்காவில் சிங்கம் தத்தெடுப்பு

வண்டலூர் பூங்காவில் ஷேரூ என்ற சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்; நிர்வாகம் வரவேற்பு

author-image
WebDesk
New Update
sivakarthikeyan

வண்டலூர் பூங்காவில் ஷேரூ என்ற சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளாராக பணியாற்றினார். அதில் கிடைத்த பிரபலம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். குறுகிய காலத்திலே சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன், வேலைக்காரன், ரெமோ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது அயலான், மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: 3 வயது குழந்தைக்கும் ஹெல்மெட்: விஜய் டி.வி வில்லி நடிகை நிஜத்தில் எப்படி ரூல்ஸ் ஃபாலோ பண்றார் பாருங்க!

publive-image

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரூ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை  மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்

சிவகார்த்திகேயன் பல்வேறு நலப்பணிகளையும், நலிந்த சினிமா கலைஞர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.  

இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரூ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை  மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த தத்தெடுப்பை பூங்கா நிர்வாகம் வரவேற்கிறது. இது ஷேரூ சிங்கத்தின் அன்றாட பராமரிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siva Karthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment