SP Balasubrahmanyam Death: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று மதியம் 1.04 மணியளவில் உயிரிழந்தார்.
எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.சரண் மருத்துவமனையில், ஊடகங்களுடன் பேசினார். மேற்படி விபரங்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்று அப்போது தெரிவித்தார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். செப்டம்பர் 13 அன்று கொரோனா எதிர்மறை சோதனையைப் பரிசோதித்தாலும், ஆகஸ்ட் 13 முதல் உயிர் காக்கும் சிகிச்சையில் இருந்தார்.
ஊடகங்களுடன் பேசிய பாலசுப்பிரமணியத்தின் மகன், எஸ்.பி. சரண், "மதியம் 1:04 மணிக்கு என் அப்பா இறுதி மூச்சு விட்டார். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி. அவரது ரசிகர்கள் அவரை நினைவில் வைத்திருக்கும் வரை, எனது அப்பா நீண்ட காலம் வாழ்வார்" என்றார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவரது மனைவி சாவித்ரி, மகள் பல்லவி மற்றும் மகன் எஸ்.பி. சரணுடன் வசித்து வந்தார். அவரது இறுதி சடங்குகளை அவரது மகன் சரண் நிகழ்த்துவார்.
நேற்று இரவு, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "ஆகஸ்ட் 5-ஆம் தேதி எம்.ஜி.எம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்ட திரு எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எக்மோ மற்றும் பிற உயிர் காக்கும் சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. எம்.ஜி.எம் ஹெல்த்கேரின் நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அகால மரணம் தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புன்னகை முகத்துடன் கூடிய அந்த பாடகர் இனி இல்லை என்பதை அறிந்து பிரபலங்களும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு தங்கள் வருத்தத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”