Tamil Selvi Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ்ச்செல்வி சீரியலில், கலெக்டருக்கு படிக்க ஆசைப்படும் தமிழ் செல்வியை, படிக்காத முறை மாமன் சரவணனுக்கு நிச்சயிக்கிறார்கள்.
தன்னுடைய கணவன் சந்தோஷை, சக்தி கழுத்தில் தாலி கட்ட அனுமதிப்பாளா ஜனனி?
தாலி கட்டப் போகும் முன்பு, தமிழ்ச்செல்வி மயக்கம் போட்டு விழ, அதனால் அந்த திருமணம் நிற்கிறது. தமிழ்ச்செல்வி படிக்க ஆசைப்படுவதைக் கேட்டு, இன்னும் நான்கு வருடத்துக்கு, தமிழ்ச்செல்விக்கு திருமணம் செய்யக் கூடாது என்று அமுதனின் சித்தப்பா கூறுகிறார். நான்கு வருடம் சும்மா எதுக்கு இருக்கணும், வெளியூர் சென்று படிக்கட்டும்னு, தமிழ் செல்வியை படிக்க வைக்கிறார்கள். தமிழ் செல்வியும் படித்து கோல்ட் மெடல் வாங்கி விட்டாள், இனி கலெக்டருக்குப் படிக்க வேண்டும்.
தமிழ்ச்செல்வியின் முறை மாமன் சரவணன் படிக்காதவன் என்றாலும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்துக்க காத்திருக்கிறேன். ஆனால், அமுதனும், அவனின் சித்தியும் சரவணனுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடுகிறார்கள்.
அதனால், தமிழ்ச்செல்விக்கு படித்த அமுதன்தான் சரி என்று சரவணன் நினைக்கிறான். அதற்குள் உடல்நிலை சரியில்லாமல் சாகும் நிலையில் இருக்கிறான் சரவணன். அவன் கடைசி ஆசை என்று தமிழ்ச் செல்விக்கும், அமுதனுக்கும் கல்யாணம் நடத்தி வைக்க சொல்கிறான்.
பின்னர் அமுதனுக்கும் தமிழ்ச்செல்விக்கும் திருமணம் நடக்கிறது. இப்போது சரவணன் பிழைத்துக் கொள்கிறான். அமுதன் வீட்டில் இந்த கல்யாணத்தை ஏற்க மறுக்கிறார்கள். அமுதனின் பாட்டி மட்டும் தமிழ் செல்விக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். தன்னுடைய கலெக்டர் கனவை பாட்டியிடம் சொல்ல, ”எனக்குத் தெரியும், இந்த பீரோவுக புக்ஸ் இருக்கு, நீ படி” என்கிறார் பாட்டி.