நடிகர் பிரித்விராஜ் அஜித்துடன் 'அவள் வருவாளா' படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சூர்யா குறித்த அவரது கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பின. அதோடு அந்த விஷயங்கள் வைரலாகியன. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜித்துடன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார் பிரித்விராஜ்.
சட்டத்தில் இருந்து மீளும் சுதந்திரம்
சன் டிவி தொலைக்காட்சியின் சமீபத்திய நேர்காணலில், 'வானமே எல்லை' நடிகர் பப்லூ பிரித்விராஜ், ஷாலினி அஜித்துடன் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அஜித் ஒரு நேர்மையான மனிதர் என்பதை இது காட்டியது. மேலும் திரைப்படத்துறையின் ஒரே ஜெண்டில்மேன் அஜித் எனவும் குறிப்பிட்டார் பப்லூ.
பூட்டுதலுக்கு முன்பு ஷாலினி அஜித் மற்றும் அவரது மகள் அனொஷ்கா ஆகியோர் உணவருந்திக் கொண்டிருந்த உணவகத்தில் சாப்பிடச் சென்றதாகக் கூறினார் பப்லூ. அவருடன் நடிக்காததால் பேச தயங்கினாராம். சுவாரஸ்யமாக, இது முதல் முறையல்ல, இதே போல் மூன்று முறை நடந்தது, என்றார். மூன்றாவது முறையில், ஹோட்டல் மேலாளர் பிருத்விராஜை அழைத்து, அவரது எண்ணை ஷாலினியிடம் கொடுக்க அனுமதி கேட்டாராம்.
ஆச்சரியப்பட்ட பிருத்விராஜ், "ஷாலினி அஜித் அவர்களிடமிருந்து அடுத்த கணம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஹோட்டலில் அவரைப் பார்த்தபோது என்னுடன் வந்து பேசவில்லை என்பதற்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். என்னைப் பார்த்தும், பேசவில்லை என ஏற்கனவே அஜித்திடம் சொல்லியிருக்கிறார். நான் ஒரு மூத்த நடிகர், அஜித்தின் நண்பன் மற்றும் அவரது பள்ளி சீனியர் என்றும், அதனால் ஷாலினி கட்டாயம் என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்திருக்கிறார்" என்றார்.
பளார்! பளார்! எஸ்ஐ கன்னத்தில் விட்ட பெண்… வைரல் வீடியோவால் பரபரப்பு!
மேலும் தொடர்ந்த பப்லூ, "அவர் அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, அது அவரது வளர்ப்பை காட்டுகிறது. அவர் ஒரு ஜெண்டில்மேன்” என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”