Tamil Serial News: சன் டிவி-யின் 'பாண்டவர் இல்லம்' சீரியலில் அன்பு சுந்தரம், குட்டி சுந்தரம் இருவரும் பேரானந்தமாக வயல் வெளியில் உட்கார்ந்து காதல் செய்துக்கொண்டு இருக்கின்றனர். வீட்டில் காதல் செய்து போரடிக்கிறது. இது ரொம்ப சுகமாக இருக்கிறது என்று குட்டி சுந்தரம் சொல்ல, அன்பு சுந்தரமும் 'ஆஹா என்ன சுகம்' என்று கூறுகிறான்.
‘நீங்க உங்க வேலைய பாருங்க’: லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்துக்கு வனிதா ’பளீர்’ பதில்
பின்னே, கண்டாங்கி சேலையுடுத்தி, கூந்தலை பக்கவாட்டில் அள்ளிச்செருகி, அன்பு சுந்தரத்தின் அழகான மனைவியான மல்லிகாவும், குட்டி சுந்தரத்தின் அழகான மனைவியான கயலும் வயல்வெளிக்கு சுவையான சாப்பாட்டு கூடையை சுமந்துக்கொண்டு வந்து பசியாற உணவு பரிமாறுகிறார்கள். உண்ட மயக்கத்தில் அன்பு சுந்தரமும், குட்டி சுந்தரமும் சாய்ந்து உட்கார்ந்து கிடக்க, இருவருக்கும் கயலும், மல்லிகாவும் இதமாக கால் பிடித்து விட்டுக்கொண்டு இருந்தால் சுகமாகத்தான் இருக்கும்!
விபத்து, எலும்பு முறிவு..! கொல்லங்குடி கருப்பாயி எப்படி இருக்கிறார்?
இடையில் இதை கண்டு மகிழும் தாத்தா வேறு, செல்லமாக இரு ஜோடியையும் என்ன பண்றீங்க, ஒடுங்க என்று விரட்டி விட, சிரித்தபடி துள்ளிக் குதித்து ஓடுகின்றனர் ஜோடிகள். இந்த காட்சியை கண்டு ஆனந்தம் கொள்கிறார் தாத்தா. இதே சந்தோஷத்தோடு அனைவரும் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு திரும்புகிறார்கள். நில்லுங்க என்று அதட்டுகிறது வீட்டு மூத்த மருமகள் ரேவதியின் குரல். எதுக்கு என் புருஷனை தோட்டத்துக்கு வர வேணாம்னு சொன்னீங்க என்று அதட்டுகிறாள். நீ வீட்டுக்கு மூத்த மருமகள் தானே. பசியோடு கிடக்கறவங்களுக்கு சமைச்சு போடணும்னு தோணுச்சா? இந்த சின்ன பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் தோணி இருக்கு. நீ என்னை நிக்க வச்சு கேள்வி கேட்கறியான்னு அதட்டறார். பசிக்கு சாப்பாடு முக்கியம் என்பது ஒரு புறம், அந்த சாப்பாட்டை சந்தோஷமாக சமைச்சு வயல்வெளிக்கு எடுத்து வந்து பறிமாறுவது என்பது எவ்வளவு சுகம்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”