Tamil Serial News: மகாபாரதம் சீரியல், விஜய் டிவியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு, மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால், மகாபாரதப் போரின் இறுதிக் கட்டத்தை விரைவில் எட்டி இருக்கிறது தொடர். துரியோதனன் தனது சகோதரர்கள் அனைவரையும் போரில் இழந்து தவிக்கும் நேரத்தில், தனி ஒருவனாக போரை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறான்.
”குங்குமம் வைக்கல, வளையல் போடல” – விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
காந்தாரியின் தவ வலிமையால் தனது தேகத்தை வஜ்ரமாக்கும் துரியோதனன்! மகாபாரதம் - இன்று காலை 11:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Mahabharatham #QuarantineTimes #VijayTelevision pic.twitter.com/cmI0zJyOal
— Vijay Television (@vijaytelevision) June 30, 2020
தாய் காந்தாரி எப்படியாவது துரியனின் உயிரை காப்பாற்றி, அவனுக்கு வலிமை தந்து போரில் வெற்றி பெறச் செய்ய வேண்டும், இருக்கும் ஒரு மகனை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறார். அவர் கண்களை கட்டிக்கொண்டு இதுவரை வாழந்த தவ வாழ்வின் பயனாக, மகன் துரியனை வெற்று உடம்பை ஒருமுறை பார்த்தால், துரியனின் உடல் வஜ்ரமாக மாறும் என்று முனிவர் வரம் தருகிறார். அதன் படி மகன் துரியோதனனுக்கு அழைப்பு விடுக்க, அவனும் தாயை வெற்று உடம்பில் காண செல்கிறான்.
’இந்த தொழில்நுட்பம் ரொம்ப முக்கியம்’: அஜித் மற்றும் தக்ஷா குழுவை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்
மாயக்காரன் கண்ணன் சும்மா விடுவானா என்ன? தருமத்தை சூழ்ச்சியின் மூலமாவது காப்பாத்த துடிப்பவனாயிற்றே. துரியோதனை இடை மறித்து, தாயின் முன் வெற்று உடம்பை காண்பிக்கும் மகன் அந்த தாயை கொன்றதற்கு சமம் என்று சொல்லி, துரியோதனன் முயற்சியை வீணடிக்கிறார். நான் இடுப்புக்குக் கீழ் மறைத்து, என் தாயை காணுவேன் என்று துரியோதனன் முனிவர் கொடுத்த வாக்குக்கு புறம்பாக சென்று தயைப் பார்க்க.. தாயும் கண்களைத் திறந்து மகனை தவ வலிமையுடன் பார்க்கிறார். என்ன சொல்வது, துரியோதனன் சக்தி இழந்து கீழே கிடக்கிறானே...!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.