’கோவம் மட்டும் வந்துரும்... பச்ச மொளகா’: கதிர் முல்லை செல்ல சீண்டல்

’ஏன் தூக்குறேன்னா, தூக்காம அதுவா போய் உக்காந்துக்காதுல அதான். எல்லாம் நாம தான் செஞ்சாகணும். நம்ம கடைல நான் செய்யாம வேற யார் செய்றது’

’ஏன் தூக்குறேன்னா, தூக்காம அதுவா போய் உக்காந்துக்காதுல அதான். எல்லாம் நாம தான் செஞ்சாகணும். நம்ம கடைல நான் செய்யாம வேற யார் செய்றது’

author-image
WebDesk
New Update
Tamil Serial News, Vijay TV pandian stores kathir mullai

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

Pandian Stores Serial: ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது. மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை என மூன்று ஜோடிகள். இவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பு பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

Advertisment

பணமின்றி தவிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய முதலைப் பண்ணை

மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது. தற்போது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள சீரியல் ஜோடிகளாக கதிரும், முல்லையும் மாறியிருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கடையில் மூட்டை சுமந்துவிட்டு, களைப்பாக வந்து உட்கார்ந்திருக்கிறான் கதிர். அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள் முல்லை. ’ஓ நீயா, நான் அண்ணியோன்னு நெனச்சிட்டேன்’ என்கிறான் கதிர். ‘ஏங்க அக்காவ கூப்பிடுறீங்க, கண்ணன கூப்பிடுறீங்க என்ன கூப்பிடல’ என்கிறாள் முல்லை. ‘இல்ல எப்பயும் அவங்க தான இருப்பாங்க அதான்’ என்ற கதிர், ‘இனிமேல் உன்னையே கூப்பிடுறேன்’ என்கிறான்.

’மாஸ் ஹீரோவின் ப்ரீஸி ஃபீல் குட் படம் போல் உள்ளது’: வைரலான விஜய் படங்கள்!

கதிர் டயர்டாக இருப்பதைப் பார்த்த முல்லை, ‘இந்த டெலிவரி பண்றது, வியாபாரம் பாக்குறதோட இருக்கலாம்ல, ஏங்க மூட்டை எல்லாம் தூக்குறீங்க’ என்கிறாள். ’ஏன் தூக்குறேன்னா, தூக்காம அதுவா போய் உக்காந்துக்காதுல அதான். எல்லாம் நாம தான் செஞ்சாகணும். நம்ம கடைல நான் செய்யாம வேற யார் செய்றது’ என்கிறான் கதிர். ‘இதுக்காக ஆள் வச்சுக்கலாம்ல’ என முல்லை கேட்ட, ‘ஏன் நான் செய்றதுல உனக்கெதும் அசிங்கமா இருக்கா’ என்கிறான். ’நீங்க கஷ்டப்படுறீங்களேன்னு சொன்னேன். மூட்டை தூக்குறதுல எனக்கெந்த பிரச்னையும் இல்ல, நீங்க அவஸ்தை படுறது தான் பிரச்னையா இருக்கு’ என்றவாறு கோபித்துக் கொண்டு உள்ளே செல்கிறாள் முல்லை. ’உடனே கோவம் மட்டும் வந்துடும்... பச்ச மொளகா’ என தானே சிரித்துக் கொள்கிறான் கதிர்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: