Advertisment

செம்பருத்தி சீரியலுக்கு டஃப் கொடுக்குமா செந்தூரப்பூவே?

செந்தூரப்பூவே சீரியலில் நடிகர் ரஞ்சித் நடித்து இருப்பது பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டி இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV, Senthoora Poove Serial, Tamil Serial News

Vijay TV, Senthoora Poove Serial, Tamil Serial News

Tamil Serial News: கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த அனுமதி வழங்கிய சூட்டோடு சூடாக விஜய் டிவி மட்டும் தான் நேற்று ஜூன் 8-ம் தேதி முதல் 'செந்தூரப்பூவே' என்கிற புது சீரியலை ஒளிபரப்பி சீரியல் பிரியர்களை தன்வசம் ஈர்த்து இருக்கிறது. சீரியலிகள் ஒளிபரப்புவதில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் டிவி, இன்னும் வழக்கமான சீரியல்களை ஒளிபரப்பாத நேரத்தில், விஜய் டிவி முந்திக்கொண்டு இருக்கிறது. செந்தூரப்பூவே சீரியலை விஜய் டிவி லாக்டவுனுக்கு முன்பே ஒளிபரப்பத் தயாராக இருந்த நிலையில் லாக்டவுன் தடையாகி விட்டது. படப்பிடிப்பை நடத்த முடியாது என்பதால், தயாராக இருந்த எபிசோடுகளை ஒளிபரப்ப முடியாத நிலை. இப்போது, படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவே ஏற்கனவே இருந்த எபிசோடுகளை ஒளிபரப்பத் தயாராகி விட்டது விஜய் டிவி.

Advertisment

ஆஸம் ஆண்ட்ரியா, அட்மைரிங் நிக்கி கல்ராணி – படத்தொகுப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாலை 7 மணி ஸ்லாட், இரவு 9:30 மணி ஸ்லாட் மட்டுமே பிரைம் டைம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ஜீ தமிழ் டிவி-யின் செம்பருத்தி சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாகி சீரியல் ஆர்வலர்களின் உள்ளங்களை கவர்ந்து முதலிடம் பிடித்தது. இதனை அடுத்து தொலைக்காட்சிகளில் இப்போது 9:30 மணி ஸ்லாட்டை விட, 9 மணி ஸ்லாட் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஜீ தமிழ் டிவிக்கு போட்டி தரும் வகையில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தான் விஜய் டிவி செந்தூரப்பூவே சீரியலை ஒளிபரப்பத் துவங்கி உள்ளது.

பணம் இல்லாமல் பிள்ளைகளின் படிப்பு பாதியில் நிற்கிறதா? கைக்கொடுக்கும் பிரபல வங்கி

செந்தூரப்பூவே சீரியலில் நடிகர் ரஞ்சித் நடித்து இருப்பது பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டி இருக்கிறது. இவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழ் டிவி சீரியலான தறியில் நடித்த ஸ்ரீநிதி நடித்து இருக்கார். கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட செந்தூரப்பூவே சீரியல், இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற ஒருவரின் மனைவி இறந்து விடுகிறார். இரண்டாவது பெண்ணான சிறுமி கயல் எப்போதும் அம்மா இல்லையே என்று ஏங்கித் தவிக்க, கிளாஸ் டீச்சர் ரோஜா மீது ஒரு பாசம் வந்துவிடுகிறது. அவரை அம்மா போல நினைக்க ஆரம்பிக்க, ரோஜா டீச்சருக்கு ஒரு காதல் இருக்கிறது என்று கதை போகிறது. ஒளிபரப்பத் துவங்கிய முதல் இரண்டு நாட்களில் சீரியல் ஒரு மணி நேரம் என்று ஒளிபரப்பாகி வருகிறது. செந்தூரப்பூவே சீரியல், ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலுக்கு டஃப் கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment