Advertisment

கையை பிடித்து வளையல் போட்டும் பிடிச்ச வேலைக்காரின்னு சொல்லிட்டாளே!

அவள் சாப்பிட்ட சில் ஐஸை, சுவைக்கிறான். அந்த நேரம் பார்த்து வில்லி நந்தினி வந்து, ஆதியின் கையில் இருக்கும் ஐஸை கொம்பெடுத்து தட்டிவிடப் பார்க்கிறாள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sembaruthi Serial, Aadhi Parvathi

Sembaruthi Serial, Aadhi Parvathi

Tamil Serial News: ஜீ தமிழ் டிவி-யின் செம்பருத்தி சீரியலில் ஆதி பார்வதியிடம் எப்படி காதலை சொன்னான் என்று மண்டையை போட்டு குழப்பிக்கொண்டு இருக்கும் நேரத்தில், சீரியல் மறு ஒளிபரப்பில் அந்த காட்சி வந்துருச்சு. ஆனால், பாருங்க அதுவும் புஸ்ஸுன்னு போயிருச்சு. ஆமாம், காதலை சொல்ல வந்த ஆதி சொல்லாம, அம்மாகிட்ட மாட்டிகிட்டான்.

Advertisment

’த்ரோபேக்’ மஞ்சிமா, ’நோ ஃபில்டர்’ ஐஸ்வர்யா: முழு புகைப்படத் தொகுப்பு

சமையல் வேலை செய்யும் பார்வதி மீது ஆதிக்கு லவ். இதை எப்படி சொல்லியும் இந்த பார்வதிக்கு புரிஞ்சுக்கற தன்மையே வரலை. எப்படியாவது இன்னிக்கு சொல்லிடணும்னு முடிவு செய்த ஆதி, பார்வதி வா... கோயிலுக்கு போலாம்னு கூப்பிடறான். பெரிய அய்யா கூப்பிடறார்னு பதில் பேசாம பார்வதி கிளம்பறான்னு காண்பிச்சாலும், பெரிய அய்யா மேல பார்வதிக்கு ஒரு அபிப்ராயம் இல்லாமல் கிளம்புவாளா? அதோட, தம்பி கணேசன் வேற அடிக்கடி பெரிய அய்யா உன்னை லவ் பண்றார் போல அக்கான்னு சொல்றான்.

கோயிலுக்கு வான்னு சொல்லிட்டு, பார்க்குக்கு கூட்டிட்டு போறான். ஏதோ பேசத் துடிக்கிறான், அப்போதும் பார்வதி கண்டுக்கலை. பெரிய அய்யா.. உங்களுக்கு நான் பிடிச்ச வேலைக்காரி. அதனால தான் என்னை இப்படி ஸ்பெஷலா பார்க்குக்கு அழைச்சுட்டு வந்து இருக்கீங்கன்னு சொல்றா. இதை விட, இன்னொன்னும் நடக்குது. ஐஸ் சாப்பிடும்போது, பார்வதி பாதி சாப்பிட்ட ஐஸை ஆதியிடம் கொடுத்துவிட்டு, இன்னொன்று வாங்க போக, இவன் அவள் சாப்பிட்ட சில் ஐஸை, சுவைக்கிறான். அந்த நேரம் பார்த்து வில்லி நந்தினி வந்து, ஆதியின் கையில் இருக்கும் ஐஸை கொம்பெடுத்து தட்டிவிடப் பார்க்கிறாள்.

நம்ம ஹீரோயின் பார்வதி அதைத் தடுக்க போயி, கையில் இருக்கும் வளையல் உடைஞ்சு போச்சு. ஆதிக்கு, அவள் கையில் வளையல் உடைஞ்சு போச்சேன்னு கவலை. கை நிறைய வளையல் போட்டுக்கட்டும் என்று வாங்கித் தந்துவிட்டு பர்ஸை பார்த்தால் பர்ஸ் காணோம். ஹீரோ என்னடா பண்றதுன்னு பார்வதியை இங்கேயே நிற்க சொல்லிவிட்டு, போறான். ஒருத்தரின் கார் என்னவோ மக்கர் செய்து நின்றுவிட, அதை நம்ம பெரும் தொழிலதிபர் ஆதி ரிப்பேர் செய்து, 500 ரூபாய் கூலி வாங்கிக்கிட்டு வந்து, பார்வதிக்கு வாங்கிய கண்ணாடி வளையலுக்கு காசு கொடுக்கிறான் பாருங்கள். டச்சிங்... டச்சிங்!

தன்னைப் பற்றிய படத்தில் 1200 கி.மீ சைக்கிள் ஓட்டிய ஜோதி குமாரி

ஆனால், ஆதி பார்வதிக்கு வளையல் போட்டு விடுவதை வீடியோ எடுத்து, அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு அனுப்பிவிட, மாட்டிகிட்டான். ஆதி எங்கிருந்தாலும் உடனே வான்னு அம்மா கட்டளை போடறாங்க. ஆதி பார்வதிக்கிட்டே காதலை எங்கே எப்போ எப்படி சொல்வான்னு பார்க்கலாம்னு பார்த்தா இப்படி ஆகிப்போச்சு. சூப்பர் கதையை தெரிஞ்சுக்க இன்னும் பொறுமை வேணும் போலிருக்கே!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Zee Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment