/tamil-ie/media/media_files/uploads/2020/01/Thirumanam-serial-maya.jpg)
Thirumanam serial maya
Thirumanam Serial : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் ஒருவழியாக, நவீன் - அனிதா திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தான் சொன்னதையும் மீறி, தங்கை அனிதா நவீனை திருமணம் செய்துக் கொண்டதால் ஆரம்பத்தில் சற்று கோபமாக இருந்தாள் ஜனனி. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட மாயா, ஜனனியை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் அனிதாவிடம் கூறி உசுப்பேத்துகிறாள்.
தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டிங் நடிகை கல்யாணியின் ’வாவ்’ படங்கள்
திருமணம் தான் யாரும் இல்லாமல் நடந்து விட்டது, ஆகையால் தாலி பெருக்கி போடுவதையாச்சும் சிறப்பாக நடத்த திட்டமிடுகிறார்கள். இதற்கிடையே ஜனனிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இந்த சமயத்தில் இதை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டாம் என ஜனனியும், சந்தோஷும் தங்களுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.
தாலி பெருக்கும் தினத்தன்று அனைத்து ஏற்பாடுகளும் அனிதா வீட்டில் தயாராக இருக்கிறது. நவீன் குடும்பத்தார் அனைவரும் கிளம்ப, தாங்கள் பின்னால் வருவதாகக் கூறி அவர்களை சமாளித்து அனுப்புகிறார்கள் ஜனனியும், சந்தோஷும். அவர்கள் அனைவரும் அனிதா வீட்டை அடைய, ஜனனியும் சந்தோஷும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.
டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்க்கும் சின்மயி : இருதரப்பு மோதலால் பரபரப்பு
’நம்மள முன்னாடி அனுப்பிட்டு, பின்னால வர்றாங்கன்னா ஏதோ இருக்கு’ என தனக்குள் நினைத்துக் கொள்கிறாள் மாயா. சந்தோஷ் ஜனனியை இன்னும் காணோம் என வீட்டில் இருக்கும் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த மாயா, ’பாத்தியா அனிதா அவளோட எண்ணமே எல்லாரும் அவள பத்தி பேசணும்ங்கறது தான். அதுவும் வேணும்ன்னே உன் ஃபங்ஷனுக்கு இன்னும் வராம இருக்குறா’ என அனிதாவிடம் கொளுத்திப் போடுகிறாள். அனிதாவும் அதற்கு தலையாட்டுகிறாள். எப்படியோ சொந்த தங்கையை அக்காவுக்கு எதிரியாக்க நினைத்த மாயாவின் பிளான் சக்சஸ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.