Advertisment

கோபிக்கு காஃபி போட்டு கொடுத்த பாக்யா; குறுக்கே வந்த ராதிகா… பாக்யலட்சுமி சீரியல்!

ராதிகாவை திட்டும் ஈஸ்வரி; கோபியிடம் சத்தியம் வாங்கிய இனியா; என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் கோபி... பாக்யலட்சுமி சீரியல்!

author-image
WebDesk
New Update
baaki

பாக்யலட்சுமி சீரியல்

கோபி கெஞ்சி கேட்டதால் காஃபி போட்டு கொடுக்கிறார் பாக்யா. அப்போது அங்கு வரும் ராதிகாவை பார்த்து கோபி பயந்து ஓடுகிறார். பாக்யலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Advertisment

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. ரசிகர்களின் பெரிய வரவேற்பு காரணமாக ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள் காரணமாக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: எழிலின் செயலால் பதறிய கோபி; ராதிகா முடிவு என்ன? பாக்யலட்சுமி ப்ரோமோ!

இதில், மே 29ஆம் தேதி எபிசோட்டில், ராதிகாவிடம் சண்டையிட்டு வரும் கோபி காஃபி குடிக்க நினைக்கிறார். அப்போது பாக்யா எல்லோருக்கும் காஃபி கொடுக்க, ரொம்ப தலைவலிக்குது ஒரு காபி கிடைக்குமா என்று கெஞ்சி கேட்டு பிறகு வேண்டாம் என்று சொல்கிறார் கோபி. அதைப் பார்த்து ராமமூர்த்தி ரொம்ப பாவமா இருக்கு நீ வீட்ல இருக்கவங்களுக்கு கொடுக்குற மாதிரி கொடுக்க வேண்டாம். தெருவுல போறவங்களுக்கு கொடுக்குற மாதிரி ஒரு காஃபி போட்டு கொடு. அதுவும் உன்னுடைய விருப்பம்.. இல்லன்னா வேண்டாம் என்று பாக்யாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

பின்னர் பாக்யா காபி போட்டு எடுத்து வந்து கோபியின் அருகில் வைக்க, அதே நேரத்தில் அதிரடியாக கிச்சனுக்குள் என்ட்ரி கொடுக்கிறார் ராதிகா. இதைப் பார்த்து, கோபி நான் ஒன்றும் காஃபி கேட்கல என்று அலறியபடி பயந்து அங்கிருந்து ஓடுகிறார். பிறகு ராதிகா எனக்கும் அவருக்கும் சண்டை ஆக இருக்கும் போது காஃபி கொடுத்து இம்ப்ரஸ் பண்ண பாக்குறீங்களா? என்று பாக்யாவிடம் கேட்கிறார்.

அதற்கு பாக்யா, நான் அவரோட சேர்ந்து வாழும் போதே இம்ப்ரஸ் பண்ண ஒன்னும் பண்ணல. விவாகரத்து கொடுத்த பிறகு அவரை இம்ப்ரஸ் பண்ணி என்ன ஆகப்போகிறது என்று பதிலடி கொடுக்கிறார். அப்போது, செல்வி இதோட முடிஞ்சிடுமா? இல்லை இன்னும் ஏதாவது இருக்கா? நீங்க பல்பு வாங்குவதை பார்க்க ஆசையா இருக்கு என்று நக்கல் செய்கிறார்.

பின்னர் இனியா ஸ்கூலுக்கு ரெடியாக, செழியன் திடீரென்று மீட்டிங் இருக்கு என்று சொன்னதால், கோபி நான் கூட்டிட்டு போறேன் என்று இனியாவை கூட்டிட்டு போகிறார். அப்போது இதை ராதிகாவிடம் சொல்லக்கூடாது என்று செல்வியை எச்சரிக்கிறார் ஈஸ்வரி. கொஞ்ச நேரம் கழித்து ராதிகா அங்கே வந்து ஜெனியிடம் கோபி எங்கே என்று கேட்கிறார். அதற்கு ஜெனி எனக்கு தெரியாது என்று சொல்கிறார். உடனே செல்வி ஒரு நிமிடம் என்று சொல்லி கிச்சனில் இருக்கும் கபோர்டுகளை திறந்து பார்த்து எங்கேயும் இல்லையே என்று நக்கல் அடிக்கிறார். இதைப் பார்த்து கோபமான ராதிகாவை பார்த்து உனக்கெல்லாம் பதில் சொல்றதே பெரிய விஷயம் என்று திட்டுகிறார் ஈஸ்வரி.

பின்னர், நீங்க சொல்லலனா எனக்கு தெரியாதா? அவருடைய கார் இல்ல, அப்ப ஆபீஸூக்கு தானே போயிருக்காரு என்று ராதிகா கூற, அவன் ஆபீசுக்கு போகல இனியாவை ஸ்கூலில் விட போயிருக்கான் என்று சொல்கிறார் ஈஸ்வரி. இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ராதிகா, என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லிட்டு போயிருக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு, உன்கிட்ட அவன் எதுக்கு சொல்லணும். அவன் பொண்ண அவன் ஸ்கூலுக்கு கொண்டு போய் விட போய் இருக்கான் என்று ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறார்.

பின்னர், இனியாவும் கோபியும் காரில் சென்று கொண்டிருக்கும் போது, இனியா ஏன் அமைதியா வர, முன்ன மாதிரி நீ இல்ல, ரொம்ப மாறிட்ட என்று கோபி கேட்க, ஏன் நீங்க மாறலையா? நீங்க மாறும்போது நான் மாறக்கூடாதா என்று இனியா பதில் கேள்வி கேட்கிறார். எதுக்கு டாடி குடிக்கிறீங்க எனக்கு சுத்தமா பிடிக்கல என்று இனியா கேட்க, டாடிக்கு டென்ஷன் என்று கோபி சமாளிக்கிறார். அந்த ராதிகா ஆன்ட்டி தானே பிராப்ளம், நீங்க அவங்கள கல்யாணம் பண்ணி இருக்க கூடாது என இனியா சொல்ல, அவசரப்பட்டுட்டேன் என்று சொல்கிறார் கோபி. அப்ப அவங்கள விட்டுட்டு வந்துருங்க என்று இனியா சொல்ல, அதற்கு அப்படி விட்டுட்டு வர முடியாது நான் பிராமிஸ் பண்ணி இருக்கேன் என்று சொல்கிறார் கோபி.

உடனே, அம்மாக்கு தான் பிராமிஸ் பண்ணினீங்க ஆனா விட்டுட்டு போகலையா? என்று இனியா கேள்வி கேட்க, அதற்கு உங்க அம்மா என்ன கஷ்டப்பட்டுட்டா இருக்கா? ரொம்ப சந்தோஷமா தானே இருக்கா என்று சொல்ல, ஆமா நீங்க போனதுக்கு அப்புறம் அம்மா ரொம்ப சந்தோசமா இருக்காங்க. நீங்க அப்போ அம்மாவை அவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்கீங்களா? என்று இனியா கேட்க பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் கோபி. மேலும், இனி நீங்க குடிக்க கூடாது என கோபியிடம் சத்தியம் வாங்கியபடி, இனிமேல் நீங்க அந்த வீட்டுக்கு போக கூடாது என்று இனியா சொல்ல கோபி என்ன செய்வது என்று தெரிவிக்காமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment