/tamil-ie/media/media_files/uploads/2022/09/bakiya.jpg)
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கதையின் முக்கிய முடிச்சு அவிழ்ந்த நிலையிலும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் முன்னனி சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர் இந்த சீரியலுக்கு அளித்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் புதிய ப்ரோமா சீரியல் ஒளிப்பரப்பு எப்போது என எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்யுள்ளது.
இதையும் படியுங்கள்: சொல்றத சொல்லிட்டோம்… அப்புறம் உங்க விருப்பம்!’ பொன்னியின் செல்வன் குழுவுக்கு கோவை வழக்கறிஞர்கள் கோரிக்கை
அந்த வீடியோவில் செல்வி, பாக்யாவை திருமண மண்டபத்துக்குள் இழுத்துச் சென்று, கோபியும் ராதிகாவும் சந்தோஷமாக மணக்கோலத்தில் இருப்பதை காட்டுகிறாள். இதைப்பார்த்து அதிர்ச்சியாகும் பாக்யா கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறாள்.
அப்போது ராதிகாவை முத்தமிட நெருங்கும் கோபி, கீழே பாக்யா நிற்பதை பார்த்து அதிர்ச்சியாகிறான். அப்போது கோபி திறுதிறுவென முழிப்பதை பார்த்த ராதிகா, திரும்பி பார்த்து அங்கு பாக்யா இருப்பதைக் கண்டு கோபமாகிறாள்.
சூழ்நிலை சீரியாக போவதை பார்த்த மயூ, நான் தான் பாக்யாவை மேலே கூட்டிட்டு வந்தேன் என்கிறாள். அப்போது செல்வி கோபியைப் பார்த்து, வெட்கமா இல்ல, நீங்க தில்லாலங்கடினு தெரியும், ஆனா இப்படி பண்ணுவீங்கனு நினைக்கல என திட்டுகிறாள். பாக்யாவை அவளை அழைக்க, இதுக்கு மேல சும்மா இருக்க கூடாது என கூறி, வீட்ல வயசானவங்க இருக்காங்க, வயசுக்கு வந்த புள்ளை இருக்கு, இங்க வந்து மாலையும் கழுத்துமா நிக்குறீங்க, வெட்கமா இல்ல, என நறுக்கென்று கேட்கிறாள் செல்வி. இதைக்கேட்டு செய்வதறியாது திகைக்கிறான் கோபி.
இவ்வாறு ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில், ராதிகாவும் கோபியும் என்ன சொல்லப்போகிறார்கள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.