Advertisment

கல்யாண குஷியில் இளைய மகள்: எதிர்க்கும் மூத்த மகள் - என்னவாகும் துரைசிங்கம் திருமணம்?

குடும்ப போட்டோவை சந்தோஷத்தோடு கொண்டு வந்து அப்பாவிடம் காட்டுகிறாள் கனி. ஆனால் மூத்த மகள் கயலுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Tamil Serial News, Vijay TV Senthoora Poove

செந்தூரப்பூவே சீரியல்

Senthoora Poove Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ எனும் சீரியல் தற்போது விறுவிறுப்பாக நகர்கிறது. இதில் நடிகர் ரஞ்சித் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடுத்தர வயது (45) கொண்ட துரைசிங்கத்தைப் பற்றிய கதை தான் செந்தூரப்பூவே. மனைவியை இழந்த துரை சிங்கம், மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு கயல்விழி மற்றும் கனிமொழி என இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு, மறு திருமணம் பற்றி துரைசிங்கம் யோசிக்கவில்லை.

Advertisment

சுரேஷ் சக்ரவர்த்திக்கும் அனிதா சம்பத்துக்கும் அப்படி என்ன தான் பிரச்னை?

இதற்கிடையே துரை சிங்கத்தின் மகள்கள் தங்களது ஆசிரியை ரோஜா மீது உயிராய் இருக்கிறார்கள். துரை சிங்கத்தின் அம்மாவும், தங்கையும் ஜோசியரை பார்க்க சென்றபோது, ‘உங்க செல்ல பேத்தி கயல்விழியோட ஜாதக படி, உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கற யோகம் இருக்கு’. அந்த பொண்ண, கயலே கூட செலக்ட் பண்ணலாம் ‘ என்றார் ஜோசியர். பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கு வரும் ஆசிரியை ரோஜாவிடம், பிள்ளைகள் அன்பாக இருப்பதைப் பார்த்து மொத்தக் குடும்பமும் சந்தோஷப் படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து, துரை சிங்கத்துக்கு, ரோஜாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள், அவரது அம்மாவும், தங்கையும்.

ஆனால் ரோஜாவின் காதலன் அன்புவின் குழந்தையோ அவள் வயிற்றில் வளர்கிறது. இதையும் துரை சிங்கத்திடம் கூறி விடுகிறாள் ரோஜா. இருப்பினும் தனது மகள் கயலின் விருப்பத்திற்கேற்ப ரோஜாவை திருமணம் செய்துக் கொள்ள உடன்படுகிறார் துரை சிங்கம். அவரை திருமணம் செய்துக் கொண்டால், நமது குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என ரோஜாவும் சம்மதிக்கிறாள்.

திருமணத்தை நிறுத்த பல வில்லன், வில்லிகள் இருந்தாலும் அதைப்பற்றி எந்த கவலையும் இன்றி கல்யாண பத்திரிக்கை தேர்வு நடக்கிறது. மகள் கயலின் ஆசைக்காக டீச்சருடன் சேர்ந்து குடும்ப போட்டோ எடுக்கிறார் துரைசிங்கம். அதை வைத்து பிளக்ஸ் போர்டு வைத்து ரசிக்கிறார்கள் துரைசிங்கத்தின் உறவினர்கள். திருமணத்தில் பாதி மனதோடு இருக்கிறார் ரோஜா டீச்சர்.

மாடலிங்கில் கில்லி: மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் பாடி பெர்ஃபெக்ட் பாலா!

குடும்ப போட்டோவை சந்தோஷத்தோடு கொண்டு வந்து அப்பாவிடம் காட்டுகிறாள் கனி. ஆனால் மூத்த மகள் கயலுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. அம்மாவின் போட்டோவை பார்த்து அழுகிறாள். இந்த திருமணத்தை நடத்த விடக்கூடாது என்று மூத்த மகளும் நினைக்கிறாள். உங்களைத் தவிர வேற யாரும் எனக்கு அம்மா இல்லம்மா, எனக்கு இந்த கல்யாணத்தில் சுத்தமா விருப்பம் இல்லை என அம்மா படத்தின் முன்பு நின்று தேம்பி தேம்பி அழுகிறாள் கனி. மூத்த மகள் நினைத்தபடி துரைசிங்கத்தின் திருமணம் நிற்குமா? இல்லை இளையமகள் நினைத்தபடி ரோஜாவுடன் திருமணம் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment