Tamil Serial News : தொலைக்காட்சிகளில் ஒரு சீரியலில் ஒரு விஷயம் நடந்தால் அடுத்தடுத்த சீரியல்களிலும் அதையே பின்பற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். விஜய் டிவியின் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா ஒரு வாரமா மசக்கை வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறாள். கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்று வெண்பா செய்த சூழ்ச்சியையும் மீறி கர்ப்பமாகிறாள் கண்ணம்மா.
மென்மையான ஹீரோயின் டூ படுபயங்கற வில்லி: ’மெளனராகம்’ ஷமிதா ஸ்ரீகுமார்
கண்ணம்மாவின் நாடி பிடித்து பார்த்து ரெட்டை நாடி துடிக்குதும்மா என்று சந்தோஷமாக தனது அம்மாவிடம் சொல்கிறான் கண்ணம்மாவின் புருஷன் பாரதி. குழந்தையே பிறக்காதுன்னு மாமியாரிடம் திட்டு வாங்கின கண்ணம்மா உண்டாகி இருக்காளே.. சீரியல் பார்க்கும் பெண்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதே காட்சிதான் அரண்மனை கிளி சீரியலிலும்... அர்ஜுன் கூட சேர்ந்து வாழாம மீனாட்சி அம்மாவால் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டவள் ஜானு. அர்ஜுன் அம்மா இருக்கும்போது ஜானுவுக்கு ஆதரவாக பேசாமல் ஜானு வீட்டை விட்டு சென்றவுடன் அவளோடு கூடவே அம்மாவுக்குத் தெரியாமல் சென்றுவிடுகிறான். இருவரும் மலைவாழ் மக்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். மலை வாழ் மக்கள் இருவருக்கும் சடங்குகள் செய்து முதலிரவு ஏற்பாடுகளையும் முடித்துவிட்டார்கள். இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டதாக சொல்லும் ஜானு இப்போது பிள்ளை உண்டாகி மசக்கை வாந்தி எடுக்கிறாள்.
‘ஆங்ரி ஓல்ட் மேன்’ – ரஜினிகாந்த் முதல் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அரண்மனை கிளி சீரியலில் கணவன் மனைவியாக ஒன்று சேராமல் வாழ்ந்து வருகிறார்கள் அர்ஜுனும் ஜானுவும். ஒரு ராத்திரியில் அவர்களை ஒன்று சேர்த்து விடுகிறார்கள் மலைவாழ் மக்கள். என்ன மகிமை பாருங்கள்.. உடனே ஜானு பிள்ளை உண்டாகி மசக்கை வாந்தி எடுக்கிறாள். அடுத்து ஈரமான ரோஜாவே சீரியலில் மலர்.. அதை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தாமரை.. இப்படி ஆரம்பிப்பார்கள். விஜய் டிவியில் இது வீட்ல விசேஷம் இல்லை.. சீரியல்களில் விசேஷம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”