பட்ஜெட் 2023: புதிய வரி முறை என்ன? உங்களுக்கு வருமான வரி தள்ளுபடி கிடைக்குமா?

நிர்மலா சீதாராமன் கூறுகையில், புதிய வரி விதிப்பு இயல்புநிலையாக இருந்தாலும், வரி செலுத்துவோர் பழைய முறையையே தேர்வு செய்யலாம். புதிய வரி முறையில் வரி அடுக்குகளில் மாற்றங்களையும் அவர் அறிவித்தார்

நிர்மலா சீதாராமன் கூறுகையில், புதிய வரி விதிப்பு இயல்புநிலையாக இருந்தாலும், வரி செலுத்துவோர் பழைய முறையையே தேர்வு செய்யலாம். புதிய வரி முறையில் வரி அடுக்குகளில் மாற்றங்களையும் அவர் அறிவித்தார்

author-image
WebDesk
New Update
பட்ஜெட் 2023: புதிய வரி முறை என்ன? உங்களுக்கு வருமான வரி தள்ளுபடி கிடைக்குமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கரட் மற்றும் பங்கஜ் சவுத்ரி மற்றும் அதிகாரிகளுடன், மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிப்ரவரி 1, 2023 புதன்கிழமை, புதுதில்லியில் உள்ள நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்திலிருந்து வெளியே வருகிறார். (புகைப்படம்: PTI)

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடினமாக உழைக்கூடிய" நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி குறித்த ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். புதிய வரி விதிப்பு இயல்புநிலையாக இருக்கும் அதே வேளையில், வரி செலுத்துவோர் பழையதையே தேர்வு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Advertisment

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி விதிப்பில் தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த முன்மொழிந்தார். எனவே, ஒரு தனிநபர் புதிய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை.

இதையும் படியுங்கள்: Union Budget 2023-24 Live Updates: பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பட்ஜெட்: மோடி

புதிய வரி முறையின் வரி அடுக்குகளில் உள்ள மாற்றங்களையும் நிதியமைச்சர் அறிவித்தார்.

புதிய வரி விதிப்பின் கீழ் புதிய வருமான வரி அடுக்குகள் உள்ளன

ரூ 0-3 லட்சம்: வரி இல்லை

ரூ.3-6 லட்சம்: 5 சதவீதம்

ரூ.6-9 லட்சம்: 10 சதவீதம்

ரூ.9-12 லட்சம்: 15 சதவீதம்

ரூ.12-15 லட்சம்: 20 சதவீதம்

15 லட்சத்திற்கு மேல்: 30 சதவீதம்

Advertisment
Advertisements

FY21 இல் தொடங்கப்பட்டதிலிருந்து அதிக வரி வசூலைக் காணாத புதிய வரி முறைக்கு மாறுவதற்கு மக்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை.

புதிய வரி விதிப்பு முறை என்ன?

தனிநபர்களுக்கான குறைந்த வரி முறை 2020 ஆம் ஆண்டில் பிரிவு 115BAC இன் கீழ், முதலீடு தொடர்பான தளர்வுகள் அல்லது விலக்குகள் எதுவும் கோரப்படாமல் எளிமையான மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதலீடு மற்றும் விலக்கு கோரும் நிலையில் இல்லாத நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புதிய வரி முறையில் முந்தைய வரி முறையை விட பல அடுக்குகள் இருந்தன.

இருப்பினும், இந்த வரி முறை மிகவும் சிக்கலானதாகக் கருதப்படுவதால், இதுவரை வரி வசூல் பெரிய அளவில் இல்லை.

முந்தைய ஜனவரியில், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் துணைத் தலைவர் கௌதம் சிக்கர்மனே எழுதிய சீர்திருத்த தேசம் என்ற புத்தகத்தில், 10 சதவீதம், 20 சதவீதம், மற்றும் 30 சதவீதம் என்ற புதிய வரி அடுக்கு மற்றும் தன்னார்வ வருமான வரி விதிப்பு பழைய முறையின் எளிமையை நீக்கிவிட்டதாக, எழுதிய கருத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "உண்மையில் எளிமையின் ஆதாயங்கள் (பழைய வருமான வரி முறையில் இருந்து) இருந்தால், அவை திரும்பப் பெறப்படவில்லை என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று பதில் அளித்தார். மேலும், “மக்கள் அதன் கீழ் வருமானத்தை தாக்கல் செய்து வருகின்றனர். எளிமையின் ஆதாயங்கள் இன்னும் உள்ளன." என்றும் நிதியமைச்சர் கூறினார்.

பழைய வரி முறை விதிவிலக்குகள் நிறைந்தது என்று நிதியமைச்சர் கூறினார்.

“ஒவ்வொரு வரி மதிப்பீட்டாளருக்கும், 7, 8, 9, 10 விதிவிலக்குகள் உள்ளன. மேலும் அந்த விதிவிலக்குகளுடன், 10, 20, 30 சதவீத விகிதம் தொடர்கிறது. இன்றும் அது தொடர்கிறது. நாங்கள் அதை அகற்றவில்லை. எளிமை என்ற பெயரிலும், துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்காகவும் நாங்கள் என்ன செய்தோம்… துன்புறுத்தலை அகற்றுவதுதான் முகமற்ற வரி மதிப்பீட்டை நாங்கள் கொண்டு வந்ததன் நோக்கம்,” என்று நிதியமைச்சர் கூறினார்.

publive-image
பல்வேறு வரி அடுக்குகள்

"எளிமையைப் பேணுவதற்கும், பழைய எளிமையைக் கடைப்பிடிக்க விரும்புவோரை மறுக்காமல் இருப்பதற்கும், நாங்கள் அதை அப்படியே வைத்திருந்தோம், ஆனால் விதிவிலக்குகள் இல்லாத, அதேநேரம் எளிமையான, சாதகமான கட்டணங்களைக் கொண்ட ஒரு இணையான அமைப்பைக் கொண்டு வந்துள்ளோம். குறைந்த வருமானத்தில் உள்ளவர்களுக்கு எளிய மற்றும் குறைந்த கட்டணத்தை உருவாக்குவதற்காக நான் ஏழு அடுக்குகளை கொண்டு வர வேண்டியிருந்தது," என்று நிதியமைச்சர் கூறினார்.

பழைய வரி விதிப்பின் கீழ் யார் தள்ளுபடி பெற தகுதியுடையவர்?

இந்த வரி முறையின் கீழ், மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியின் அளவைக் குறைக்க முதலீடுகள், வீட்டு வாடகை, எல்.டி.ஏ, பிரிவு 80C இன் கீழ் விலக்குகள் போன்றவற்றை மேற்கோள் காட்டலாம். இருப்பினும், சில வல்லுநர்கள் இது வரி செலுத்துவோர் மீது அதிக சுமைகளை ஏற்றுக்கொள்வதாக நம்புகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Income Tax Nirmala Sitharaman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: