Advertisment

Union Budget 2023-24 Live Updates: புதிய வரி முறை கவர்ச்சிகரமானது.. நிர்மலா சீதாராமன்

Union Budget 2023-24 Live Updates in Tamil : இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தொடர்பான அனைத்து செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New tax regime attractive, but you can still opt for old one

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Budget 2023 Live Updates: 2023- 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

Advertisment

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5 வது பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

நிர்மலா சீதாராமன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இந்த பட்ஜெட்டை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய நிதித் துறை செயலாளர் டிவி சோமநாதனும் இதில் இடம் பெற்றுள்ளார்.

பட்ஜெட் செயலி  

பட்ஜெட் உரை  முடிந்த பிறகு பட்ஜெட் ஆவணம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இணையத்தில் பதிவேற்றப்படும். ‘Union budget mobile app’ என்ற செயலி மூலம் பட்ஜெட் ஆவணத்தை வாசிக்க முடியும். 



  • 20:34 (IST) 01 Feb 2023
    புதிய வரி முறை கவர்ச்சிகரமானது, ஆனால் பழையதையும் தேர்வுசெய்யலாம்.. நிர்மலா சீதாராமன்

    மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், “தனி நபர் வருமானம் மீதான வருமான வரி விலக்கை ரூ.7 லட்சமாக உயர்த்தினார்.

    அப்போது பேசிய அவர், “புதிய வரி முறை கவர்ச்சிகரமானது, ஆனால் நீங்கள் பழையதையும் தேர்வுசெய்யலாம்” என்றார்.



  • 20:17 (IST) 01 Feb 2023
    பணக்காரர்களை பணக்காரர்கள் ஆக்கும் பட்ஜெட்.. சித்த ராமையா

    மத்திய பட்ஜெட் பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்கும் பட்ஜெட் என கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் சித்த ராமையா விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர், “இந்தப் பட்ஜெட் பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆகவும், ஏழைகளை மேலும் ஏழையாகவும் ஆக்கும்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடும் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள், விவசாயிகளுக்கு எந்த வித நிவாரணமும் பட்ஜெட்டில் வழங்கப்படவில்லை.

    பாரதிய ஜனதா ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக இதுதான் நடைபெறுகிறது” என்றார்.



  • 20:05 (IST) 01 Feb 2023
    ஏழைகள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை.. ராகுல் காந்தி

    ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் ட்விட்டரில், 1 சதவீத செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீத சொத்துக்கள் உள்ளன.

    50 சதவீதம் உள்ள ஏழை மக்களில் 64 சதவீதம் பேர் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டுகின்றனர். இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்தப் பட்ஜெட்டில், “புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சமூக ஏற்றத் தாழ்வுகளை சீர்படுத்துதல் உள்ளிட்ட எந்தத் திட்டமும் இல்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.



  • 20:04 (IST) 01 Feb 2023
    ஏழைகள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை.. ராகுல் காந்தி

    ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் ட்விட்டரில், 1 சதவீத செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீத சொத்துக்கள் உள்ளன.

    50 சதவீதம் உள்ள ஏழை மக்களில் 64 சதவீதம் பேர் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டுகின்றனர். இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்தப் பட்ஜெட்டில், “புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சமூக ஏற்றத் தாழ்வுகளை சீர்படுத்துதல் உள்ளிட்ட எந்தத் திட்டமும் இல்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.



  • 19:50 (IST) 01 Feb 2023
    மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த பட்ஜெட்: ப.சிதம்பரம்

    மத்திய பட்ஜெட் பெரும்பான்மையான இந்தியர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துள்ளது, மக்களிடம் இருந்து அரசாங்கம் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதையும், இந்தப் பட்ஜெட் காட்டுகிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்தார்.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பட்ஜெட்டை 'அபத்தமானது' என்று அழைத்த முன்னாள் நிதியமைச்சர், "வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை போன்ற வார்த்தைகளை நிதியமைச்சகம் குறிப்பிடவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்.

    அவரது உரையில் ஏழை என்ற வார்த்தையை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் கவலையில் யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்பதை இந்திய மக்கள் கவனத்தில் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்." என்றார்.



  • 19:46 (IST) 01 Feb 2023
    பட்ஜெட் 2023; காங்கிரஸ் குற்றச்சாட்டு

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

    மேலும், இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸின் தரவு பகுப்பாய்வு துறையின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, “அவர்கள் (பாஜக) அரசாங்க மூலதனச் செலவினங்களுக்காக நிறையப் பணத்தைச் செலவிடுவதாகக் கூறியுள்ளனர்.

    இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டதால் இதெற்கெல்லாம் பணம் கிடைக்கிறது” என்றார்.



  • 19:38 (IST) 01 Feb 2023
    மத்திய பட்ஜெட்; செல்லுலார் ஆபரேட்டர்ஸ் வரவேற்பு

    செயற்கை நுண்ணறிவு மற்றும் 5G பெருக்கத்திற்கான செலவை அதிகரிப்பதற்கான மையத்தின் முடிவை புதன்கிழமை இந்தியாவின் செல்லுலார் ஆப்பரேட்டர்கள் வரவேற்றனர்.



  • 19:26 (IST) 01 Feb 2023
    மத்திய பட்ஜெட்; அக்சா ஏர் நிறுவனர் பாராட்டு

    அகசா ஏர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே, 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாட்டில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவியதற்காகப் பாராட்டினார்.



  • 18:50 (IST) 01 Feb 2023
    2 காசுகள் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு

    பட்ஜெட் நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து 81.90 ஆக காணப்பட்டது.

    2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பிறகு, புதன்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் ஆரம்ப லாபங்களைச் சமாளித்து 2 பைசா குறைந்து 81.90 ஆக என காணப்பட்டது.



  • 18:25 (IST) 01 Feb 2023
    ஆவாஸ் யோஜனா.. சரத்குமார் வரவேற்பு

    மத்திய பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிதியுதவி 66 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.



  • 18:17 (IST) 01 Feb 2023
    சிகரெட் வரி உயர்வு; அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

    மத்திய பட்ஜெட்டில் சிகரெட்டுக்கு வரி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வருமானவரி விகிதங்களில் 2017-18ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலாவது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறவில்லை. மாறாக நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள பழைய வருமானவரி விகிதங்களின்படியான வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 2020-21ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமானவரி விகிதங்களின்படியான வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

    அதிகரித்து வரும் பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, மாத ஊதியப் பிரிவினரின் வரிச்சுமையை ஓரளவாவது குறைக்கும் என்ற வகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

    தொடர்வண்டித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ரூ.2.40 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 8 புதிய தொடர்வண்டித் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்க தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து ஆதாரங்களின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ரூ.13.70 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

    சிகரெட் மீது 16% கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது; ஆனாலும் இது போதுமானது அல்ல. சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக அவற்றின் மீதான வரியை, அவற்றின் சில்லறை விற்பனை விலையில் 75% என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. அதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்தியாவில் இப்போது சிகரெட் மீது 52.7%, பீடி மீது 22%, மெல்லும் புகையிலை மீது 63.8% என்ற அளவில் தான் வரி விதிக்கப்படுகிறது. சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்ட பிறகும் கூட உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை எட்ட முடியாது என்பதால், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான வரி விகிதங்களை இன்னும் கடுமையாக உயர்த்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

    அதேநேரத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.



  • 17:51 (IST) 01 Feb 2023
    பட்ஜெட் 2023; காங்கிரஸ் குற்றச்சாட்டு

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

    மேலும், இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸின் தரவு பகுப்பாய்வு துறையின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, “அவர்கள் (பாஜக) அரசாங்க மூலதனச் செலவினங்களுக்காக நிறையப் பணத்தைச் செலவிடுவதாகக் கூறியுள்ளனர்.

    இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டதால் இதெற்கெல்லாம் பணம் கிடைக்கிறது” என்றார்.



  • 17:51 (IST) 01 Feb 2023
    பட்ஜெட் 2023; காங்கிரஸ் குற்றச்சாட்டு

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.



  • 17:27 (IST) 01 Feb 2023
    ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்; வைகோ அறிக்கை

    மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

    ஆனால், பொருளாதார ஆய்வறிக்கையில் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாணடி 6.8 விழுக்காடாக இருக்கும என்று கணித்துள்ள நிலையிலும், ரூபாய் மதிப்பு குறைந்து வரும் சூழலிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வரும் நிலையிலும், 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இலக்கை எப்படி எட்ட முடியும்?

    வேளாண்மைத் தொழிலை ஊக்குவிக்க எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது. வேளாண் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்தும், வேளாண் கடன் வட்டி குறைப்பு பற்றியும் அறிவிப்பு இல்லை.

    உற்பத்தித் தொழில்துறை சரிவிலிருந்து மீண்டு எழ உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பை அதிகம் அளிக்கும் துறைகள்.

    ஆனால் அவற்றின் மேம்பாட்டிற்கு 15 விழுக்காட்டிற்கு மேல் ஜி.எஸ்.டி. வரி கூடாது என்று வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க வெறும் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது போதாது.

    நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 22 விழுக்காடு குறைந்திருப்பதற்கு பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 விழுக்காடு வரிதான் காரணம் என்பது ஜவுளி துறையினரின் கருத்தாக உள்ளது.

    எனவே, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததைப் போல இனி ஆண்டுதோறும் அதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறையினர் கோரினர். அதுபற்றிய அறிவிப்பும் இல்லை.

    அடுத்த மூன்று ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் இதனால் பயன்பெற்ற இளைஞர்கள் எத்தனை லட்சம் பேர் என்று ஒன்றிய அரசு அறிவிக்குமா? வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

    தனிநபர் வருமான வரி வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒன்றிய நிதி அமைச்சர் வரவு - செலவு திட்டத்தில் 7 முக்கிய கூறுகளை இலக்காக அறிவித்துள்ளார். எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஏழைகளின் முன்னேற்றம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம், உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை நிறைவேற்ற மாநில அரசுகளின் பொறுப்பும், கடமையும் அதிகம் இருக்கிறது என்பதையும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும். மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் பாரபட்சம் கூடாது. ஜி.எஸ்.டி நிதி அளிப்பதையும் தாமதிக்கக் கூடாது.

    தமிழ்நாட்டின் புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்தால்தான் உண்மையான நிலை தெரியும்.

    பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டங்களுக்கு 19700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் காவிரிப் பாசனப் படுகை மாவட்டங்களில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டப் பணிகளை ஒன்றிய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டலாம். கூட்டுறவு சங்கங்கள் தரவு தளம் அமைப்பதன் மூலம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து கூட்டுறவு அமைப்புகளை ஒன்றிய அரசு முழுமையாகக் கொண்டு செல்லும் நிலைதான் உருவாகும்.

    ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை; ஏமாற்றமே மிஞ்சுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.



  • 17:00 (IST) 01 Feb 2023
    'வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டவிழ்த்துவிட முயற்சி'

    பட்ஜெட் வழங்கும் டிஜிட்டல் உந்துதலைப் பற்றி பேசிய நிதியமைச்சர், “நாங்கள் எதிர்கால ஃபின்டெக் துறையை பார்க்கிறோம். தொழில்துறை புரட்சி 4.0 மூலம் மக்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள், மேலும் பல்வேறு துறைகளில் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டவிழ்த்துவிட முயற்சிக்கிறோம், என்று கூறினார்



  • 16:55 (IST) 01 Feb 2023
    மூலதன முதலீட்டுக்கு பட்ஜெட் பெரிய வாய்ப்பை அளிக்கிறது: நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் வழங்கும் முதலீட்டு உந்துதலைப் பற்றி விவரித்த நிதியமைச்சர், “இது மூலதன முதலீட்டுக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுக்கிறது, MSME கள் வளர்ச்சியின் இயந்திரமாக இருப்பதால், மூலதன முதலீட்டை நிலைநிறுத்துகிறது மற்றும் தனியார் துறைக்கு உந்துதலை அளிக்கிறது. அதேசமயம் தனிநபர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சலுகைகள் அளிக்கும், என்று கூறினார்.



  • 16:41 (IST) 01 Feb 2023
    புதிய வரிவிதிப்பு முறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவோம்: நிர்மலா சீதாராமன்

    புதிய வரிவிதிப்பு முறைக்கு தற்போது அதிக சலுகைகள் கிடைத்துள்ளதாகவும், அதனால் மக்கள் தயக்கமின்றி பழையதை விட்டு புதியதை நோக்கி நகர முடியும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். மேலும் “நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் புதியது இப்போது கவர்ச்சிகரமானதாக உள்ளது, ஏனெனில் இது அதிக தள்ளுபடியை அளிக்கிறது, ”என்றும் அவர் கூறினார்.



  • 16:27 (IST) 01 Feb 2023
    பெண்கள் அதிகாரம் முதல் பசுமை வளர்ச்சி வரை பட்ஜெட் கவனம் செலுத்துகிறது – நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சுற்றுலா, விஸ்வகர்மா அல்லது பாரம்பரியமாக நாட்டிற்காக உழைத்தவர்கள், பசுமை வளர்ச்சி ஆகிய 4 முக்கிய அம்சங்களில் பட்ஜெட் முக்கியமாக கவனம் செலுத்துகிறது, என்று கூறினார்.



  • 16:23 (IST) 01 Feb 2023
    பட்ஜெட்2023: கல்வித் துறையில் முக்கிய அம்சங்கள்



  • 16:14 (IST) 01 Feb 2023
    பட்ஜெட்2023: வேலைகள் துறையில் முக்கிய அம்சங்கள்



  • 16:12 (IST) 01 Feb 2023
    பட்ஜெட்2023: சுகாதார துறையில் முக்கிய அம்சங்கள்



  • 15:53 (IST) 01 Feb 2023
    ‘இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி தரத்தை பட்ஜெட் வலியுறுத்துகிறது’

    பார்ச்சூன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் பிசினஸின் நிர்வாக இயக்குனர் ராதிகா ஸ்ரீவஸ்தவா, மத்திய பட்ஜெட் குறித்து கூறியதாவது: “புதுமையான கற்பித்தல், பாடத்திட்ட பரிவர்த்தனை, தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு மற்றும் ஐசிடியை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்துவதற்கான அறிவிப்பு பாராட்டத்தக்க முயற்சியாகும். மேலும், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை (டயட்) துடிப்பான சிறந்த நிறுவனங்களாக மாற்றுவது மற்றும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகத்தை நிறுவுவது என்பது குழந்தைகளிடையே அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணற்ற தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக அமையும்.

    அவர் மேலும் கூறியதாவது: பஞ்சாயத்து மட்டங்களில் இயற்பியல் நூலகங்களை நிறுவுவதற்கும், தேசிய டிஜிட்டல் நூலக வளங்களுக்கான அணுகலை வழங்குவதற்கும் மாநிலங்களுக்கு உதவுவது, மாணவர்களிடையே ஒரு உகந்த கற்றல் சூழலை உருவாக்கி, தகவல் தொடர்பு மற்றும் படைப்பாற்றல் திறன்களை வளர்க்கும். மேலும், 740 ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்களை நியமிக்கும் முடிவு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் தரத்தை நோக்கிச் செல்வதற்கான சிந்தனைமிக்க முடிவாகும்.



  • 15:36 (IST) 01 Feb 2023
    பட்ஜெட்டில் பணவீக்கத்திலிருந்து நிவாரணம் இல்லை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பட்ஜெட் குறித்து மத்திய அரசை தாக்கி, “இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்திலிருந்து எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை அகற்ற உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான பட்ஜெட்டை 2.64%லிருந்து 2.5% ஆகக் குறைப்பது துரதிர்ஷ்டவசமானது. சுகாதார பட்ஜெட்டை 2.2% லிருந்து 1.98% ஆக குறைப்பதும் தீங்கு விளைவிக்கும்.” என்று கூறினார்.



  • 15:22 (IST) 01 Feb 2023
    பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பட்ஜெட் நடவடிக்கை எடுத்துள்ளது: மோடி

    பெண்கள் மீதான அரசாங்கத்தின் புதிய கவனத்துடன் முன்னோக்கிச் செல்லும் பிரதமர் மேலும் கூறியதாவது: “கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அவர்களை மேலும் மேம்படுத்தும். குடும்பங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும்.



  • 15:09 (IST) 01 Feb 2023
    வருமான வரி தள்ளுபடி 'குறைவு', 'பணவீக்கம், வேலையின்மைக்கு தீர்வு இல்லை': காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய்

    காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், நிதியமைச்சர் அறிவித்த 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி தள்ளுபடி "போதாதது" என்று கூறினார். "பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, நடுத்தர வர்க்கத்தினருக்கு இது கடலில் ஒரு துளி போன்றது" என்று எம்.பி கௌரவ் கோகோய் கூறியதாக ANI தெரிவித்துள்ளது.

    பட்ஜெட்டில் "விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு தீர்வு இல்லை. ஏழைகளுக்கு வெறும் வார்த்தைகளும், பேச்சு வார்த்தைகளும்தான் கிடைத்தன. இந்த பட்ஜெட் பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே பலன் தருகிறது" என்றும் எம்.பி கௌரவ் கோகோய் கூறினார்.



  • 15:00 (IST) 01 Feb 2023
    'நடுத்தர வர்க்கத்துக்கான பட்ஜெட்': பிரதமர் மோடிக்கு ஸ்மிருதி இரானி பாராட்டு

    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, "நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட்" என்று குறிப்பிட்டார், "இது எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய பட்ஜெட்" என்று கூறினார்.

    மேலும், "பெண்களை கவுரவிக்கும் வகையில், சேமிப்பிற்கான புதிய விருப்பத்தை முன்வைத்த நிதியமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய பட்ஜெட், 'நாரி சக்தி' எவ்வாறு அதிகாரம் பெற்ற தேசத்தை உருவாக்க முடியும் என்பதை பிரதிபலித்தது," என்று ஸ்மிருதி இராணி கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • 14:45 (IST) 01 Feb 2023
    வரி குறைப்பு வரவேற்கத்தக்கது - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

    மத்திய பட்ஜெட் 2023-24க்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "நான் குறைந்த வரி விதிப்பு முறையை நம்புபவன். எனவே, எந்த வரி குறைப்பும் வரவேற்கத்தக்கது, ஏனெனில் மக்களின் கைகளில் அதிக பணம் கொடுப்பதே பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சிறந்த வழி,” என்று கூறினார்



  • 14:34 (IST) 01 Feb 2023
    வளர்ச்சி அடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட் - மோடி பாராட்டு

    மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: அமிர்த காலின் முதல் பட்ஜெட், வளர்ச்சி அடைந்த இந்தியாவைக் கட்டமைக்க வலுவான அடித்தளத்தை உருவாக்கும். இந்த பட்ஜெட் ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட லட்சிய சமுதாயத்தின் கனவுகளை நிறைவேற்றும்.



  • 14:27 (IST) 01 Feb 2023
    பட்ஜெட் 2023: AIக்கான 3 சிறந்த மையங்கள், 5G பயன்பாடுகளை உருவாக்க பொறியியல் கல்லூரிகளில் 100 ஆய்வகங்கள்

    சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று சிறப்பு மையங்களும், 5ஜி சேவைகளைப் பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்க பொறியியல் நிறுவனங்களில் 100 ஆய்வகங்களும் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார். மக்களவையில் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    “சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். விவசாயம், சுகாதாரம், நிலையான நகரங்கள் ஆகிய துறைகளில் துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, அதிநவீன பயன்பாடுகளை உருவாக்குதல் மற்றும் அளவிடக்கூடிய சிக்கல் தீர்வுகள் ஆகியவற்றில் முன்னணி தொழில்துறை நிறுவனங்கள் பங்குதாரர்களாக இருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

    5ஜி சேவைகளைப் பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்க பல்வேறு அதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், வங்கிகள் மற்றும் பிற வணிகங்களுடன் இணைந்து பொறியியல் நிறுவனங்களில் மொத்தம் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று சீதாராமன் கூறினார். "புதிய அளவிலான வாய்ப்புகள், வணிக மாதிரிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உணர, ஆய்வகங்கள் மற்றவற்றுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள், துல்லியமான விவசாயம், அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சுகாதார பயன்பாடுகள் போன்ற பயன்பாடுகளை உள்ளடக்கும்," என்று அவர் கூறினார்.



  • 14:12 (IST) 01 Feb 2023
    பட்ஜெட் 2023: சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயர்வு; 17,800 அளவை நெருங்கும் நிஃப்டி

    மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ததால், புதன்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

    30 பங்கு பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 640.01 புள்ளிகள் உயர்ந்து 60,189.91 புள்ளிகளை எட்டியது. பின்னர் சென்செக்ஸ் 516.35 புள்ளிகள் அல்லது 0.87 சதவீதம் உயர்ந்து 60,066.25 ஆக வர்த்தகமானது. பரந்த என்எஸ்இ நிஃப்டி 137.35 புள்ளிகள் அல்லது 0.78 சதவீதம் உயர்ந்து 17,799.50 புள்ளிகளாக இருந்தது.

    சென்செக்ஸ் பேக்கில் இருந்து, 27 பங்குகள் நேர்மறை நிலப்பரப்பில் வர்த்தகம் செய்யப்பட்டன, 3 பங்குகள் மட்டுமே சரிவில் இருந்தன. ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டி, 2.92 சதவீதம் வரை உயர்ந்தன.



  • 13:31 (IST) 01 Feb 2023
    2023 பட்ஜெட் வாகன விற்பனைக்கு ஊக்கமளிக்கும்

    மாசுபடுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு மாநில அரசுகள் மற்றும் நகராட்சிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டிற்குள் பசுமை எரிபொருளுக்கு மாறுவதில் அரசாங்கத்தின் கவனமும் இருப்பதால், மின்சார வாகனங்கள் உட்பட நாட்டில் ஆட்டோமொபைல்களின் விற்பனைக்கு இது உந்துதலைக் கொடுக்கும்.

    டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் போன்ற நிறுவனங்கள்இதில் மிகப்பெரிய பயனாளிகளாக இருக்கும் Mihir Mishra writes



  • 13:27 (IST) 01 Feb 2023
    ரூ.35,000 கோடி: வரி மாற்றங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு இவ்வளவுதான் இழப்பு

    புதிய வரி விதிப்பு முறை குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் இழப்புகள் குறித்தும் பேசினார். "நடுத்தர வருமானக் குழுவிற்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியா 35,000 கோடி நிகர வரி வருவாயை இழக்கும்.

    ரூ. 37,000 கோடி நேரடி வரிகள் மற்றும் ரூ 1,000 கோடி மறைமுக வரிகள் – என சுமார் ரூ.38,000 கோடி வருவாய் கைவிடப்படும் அதே நேரத்தில் சுமார் ரூ 3,000 கோடி வருவாய் கூடுதலாக திரட்டப்படும். இதனால், ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் மொத்த வருவாய் பறிக்கப்படுகிறது,'' என்றார்.



  • 13:24 (IST) 01 Feb 2023
    கர்நாடகாவின் பத்ரா மேட்டு நிலத் திட்டத்துக்கு ரூ.5,300 கோடி ஒதுக்கீடு; முதல்வர் நன்றி

    மத்திய பட்ஜெட் 2023 கர்நாடகாவின் பத்ரா மேட்டு நிலத் திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்குகிறது, இது மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு, சித்ரதுர்கா, துமகுரு மற்றும் தாவங்கரே மாவட்டங்களில் 2.25 லட்சம் ஹெக்டேர்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மானியம் வழங்கியதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.



  • 13:21 (IST) 01 Feb 2023
    பொருளாதார வளர்ச்சிக்கு கடன் முக்கியமானது: பாங்க் பஜார் தலைமை நிர்வாக அதிகாரி

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, கருத்துகள் குவியத் தொடங்கின. பாங்க் பஜாரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி கூறியதாவது: விவசாயக் கடன் செலவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. இது தொழில் மற்றும் சில்லறைக் கடன்களைப் போலவே விவசாயத்திற்கும் பொருந்தும். அதிக டிஜிட்டல்மயமாக்கல் கடன் அணுகலை மேம்படுத்துகிறது.



  • 13:16 (IST) 01 Feb 2023
    பட்ஜெட் 2023: எது மலிவானது அல்லது விலை அதிகம்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல பொருட்களில் வரி அதிகரிப்பு மற்றும் குறைப்புகளை அறிவித்தார், இது பல பொருட்களின் விலை உயர்வு அல்லது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதோ ஒரு பட்டியல்:

    எது மலிவானது

    டிவி பேனல்களின் ஓபன் செல்களின் பகுதிகளுக்கான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது

    மொபைல் போன் உற்பத்திக்கான சில உள்ளீடுகளின் இறக்குமதி மீதான சுங்க வரியை குறைக்க அரசு முன்மொழிகிறது

    ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் விதைகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு குறைக்கிறது

    ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது

    என்ன விலை அதிகம்

    சிகரெட் மீதான வரி 16 சதவீதம் உயர்வு

    கலப்பு ரப்பரின் அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்வு

    தங்கக் கட்டிகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது

    கிச்சன் எலக்ட்ரிக் சிம்னி சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்வு



  • 13:11 (IST) 01 Feb 2023
    பட்ஜெட் 2023: நிர்மலா சீதாராமனின் முழு உரை

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவால்கள் இருந்தபோதிலும் பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது என்றும் அவர் கூறினார்.

    ஆங்கிலத்தில் முழு உரையும் படிக்க கிளிக் செய்க: https://indianexpress.com/article/business/budget-2023-nirmala-sitharaman-speech-full-text-8416756/



  • 12:50 (IST) 01 Feb 2023
    புதிய வரி விதிப்பு

    புதிய வரி விதிப்பில் வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் மற்றும் வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விதிப்பு இனி இயல்புநிலை வரி விதிப்பாக இருக்கும் என்று கூறினார்.



  • 12:44 (IST) 01 Feb 2023
    புதிய வரி முறையின் கீழ் திருத்தப்பட்ட வரி அடுக்குகள் இங்கே

    ரூ 0-3 லட்சம் வரை வருமான வரி இல்லை.

    ரூ.3 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும்.

    ரூ.6 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.9 லட்சம் வரை வருமானம் 10% வரி விதிக்கப்படும்.

    ரூ.12 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்படும்.

    ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் ரூ.30% வரி விதிக்கப்படும்.



  • 12:42 (IST) 01 Feb 2023
    வருமான வரி அடுக்குகளில் மாற்றத்தை அறிவித்த நிர்மலா

    2.5 லட்சத்தில் இருந்து 6 வருமான அடுக்குகளுடன் கூடிய புதிய தனிநபர் வருமான வரி முறையை 2020 இல் அறிமுகப்படுத்தினேன். இந்த ஆட்சியில் அடுக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைத்து, வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தி, வரி கட்டமைப்பை மாற்றியமைக்க முன்மொழிகிறேன்- நிர்மலா



  • 12:36 (IST) 01 Feb 2023
    5ஜி சேவைகளைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள்

    பொறியியல் நிறுவனங்களில் 5ஜி சேவைகளைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

    புதிய அளவிலான வாய்ப்புகள், வணிக மாதிரிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க, ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், துல்லியமான விவசாயம், நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சுகாதாரம் போன்ற பயன்பாடுகளை உள்ளடக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.



  • 12:32 (IST) 01 Feb 2023
    வருமான வரி தள்ளுபடி வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்வு

    வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.



  • 12:20 (IST) 01 Feb 2023
    இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு நல்ல செய்தி

    கேமரா லென்ஸ் மற்றும் லித்தியம் பேட்டரிகளுக்கான சில உள்ளீடுகளுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஒரு வருடத்திற்கு தொடரும்.



  • 12:19 (IST) 01 Feb 2023
    நிதிப் பற்றாக்குறை

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறையை 5.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளார்.



  • 12:18 (IST) 01 Feb 2023
    பொதுவான வணிக அடையாளமாக PAN

    அரசாங்கத்தின் அனைத்து குறிப்பிட்ட துறைகளின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) ஒரே வணிக அடையாளமாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது வணிகங்களின் இணக்கச் சுமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • 12:17 (IST) 01 Feb 2023
    5 சதவீத கம்பிரெஸ்ட் பயோகேஸ் ஆணை

    இந்தியாவில் இயற்கை எரிவாயுவை விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் 5 சதவீத கம்பிரெஸ்ட் பயோகேஸ் ஆணையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இயற்கை எரிவாயுவை விற்பனை செய்யும் நிறுவனங்கள், அவற்றின் அளவுகளில் 5 சதவீத அளவுக்கு சுருக்கப்பட்ட பயோகேஸ் அல்லது CBG ஐ சந்தைப்படுத்த வேண்டும்.



  • 12:13 (IST) 01 Feb 2023
    சிறு குறு தொழில்களுக்கு கடன் உத்தரவாதம்

    புதுப்பிக்கப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல், கார்பஸில் ரூ.9,000 கோடி செலுத்துவதன் மூலம் நடைமுறைக்கு வரும். இது சிறு குறு தொழில்களுக்கு கூடுதல் பிணையமில்லா கடன் ரூ.2 லட்சம் கோடியை வழங்கும்.



  • 12:11 (IST) 01 Feb 2023
    ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள்

    பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 ஐ அரசாங்கம் தொடங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச வாய்ப்புகளைப் பெற இளைஞர்களுக்கு திறன் அளிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.



  • 12:07 (IST) 01 Feb 2023
    போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்கள்

    50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், வாட்டர் ஏரோட்ரோம்கள் மற்றும் மேம்பட்ட தரையிறங்கும் மண்டலங்கள் புத்துயிர் பெறும். ஸ்டீல், துறைமுகங்கள், உரம், நிலக்கரி, உணவு தானியம் ஆகிய துறைகளுக்கான 100 முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்கள் ரூ.75,000 கோடி முதலீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.15,000 கோடி தனியாரிடம் இருந்து பெறப்பட்டதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.



  • 11:58 (IST) 01 Feb 2023
    ரயில்வே துறை : ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு

    ரயில்வேதுறையை மேலும் வளர்க்க ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கப்படுள்ளது. இந்த முறைதான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



  • 11:45 (IST) 01 Feb 2023
    விவசாயக் கடன் ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    விவசாயக் கடன் ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு, தோட்டக்கலை துறைக்கு ரூ 2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி.



  • 11:38 (IST) 01 Feb 2023
    157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்

    157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். 2047-ம் ஆண்டுக்குள் ரத்த சோகை நோய்யை ஒழிக்க வேண்டும். மருத்துவத்துறை: ஐ.சி.எம்.ஆர் லாப் அமைக்கப்படும். இந்த லாபில் மருத்துவம் சமந்தமான ஆய்வுகள் நடைபெறும். மேலும் ஆய்வு மற்றும் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்படும்.



  • 11:22 (IST) 01 Feb 2023
    கடந்த 9 வருடங்களில் : இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.

    இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 9 வருடங்களில் வளர்ச்சியடைந்து 10 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா காலத்தில் உலகமே பொருளாதார வீழ்ச்சியால் அவதிப்பட்ட போது இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை.



  • 11:19 (IST) 01 Feb 2023
    அடுத்த ஒரு வருடத்திற்கு உணவு தானியங்கள் வழங்கப்படும்.

    கொரோனா காலத்தில் ஏழை மக்கள் பசியால் வாட கூடாது என்பதற்காக, 80 கோடி மக்களுக்கு 28 மாதங்கள் அரிசி மற்றும் தானியங்கள் வழங்கப்பட்டது. அடுத்த ஒரு வருடத்திற்கு அரிசி மற்றும் தானியங்கள் வழங்கப்படும்.



  • 11:10 (IST) 01 Feb 2023
    பொருளாதாரா வளர்ச்சி 7 % இருக்கும்

    இந்த வருடத்திற்கானப் பொருளாதாரா வளர்ச்சி 7 % மாக இருக்கும். இந்தியா ஒரு நம்பிக்கை நடத்திரம் என்று உலக நாடுகள் ஏற்றுகொண்டுள்ளது.- நிர்மலா சீதாராமன்



  • 11:02 (IST) 01 Feb 2023
    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தொடர்பாக அவர் பேசி வருகிறார்.



  • 10:56 (IST) 01 Feb 2023
    அமைச்சரவை கூட்டம் ஒப்புதல்

    மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் 2023-24 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.



  • 10:39 (IST) 01 Feb 2023
    நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மோடி

    மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.



  • 10:33 (IST) 01 Feb 2023
    நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மோடி

    மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க நடைபெறும் அமைச்சரை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.



  • 10:28 (IST) 01 Feb 2023
    நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மோடி

    மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.



  • 09:43 (IST) 01 Feb 2023
    பட்ஜெட் தாக்கல்: பங்குச் சந்தை உயர்வு

    இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டி சென்சக்ஸ் 60,066.87 ஆக உயர்ந்துள்ளது. நிஃடி புள்ளிகள் 17,815.30 ஆக உயர்ந்துள்ளது.



  • 09:32 (IST) 01 Feb 2023
    காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல்

    பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் ஒப்புதல் பெறப்படும்.



  • 09:15 (IST) 01 Feb 2023
    குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசு தலைவர் சந்திக்க புறப்பட்டார். தொடர்ந்து காலை 10 மணிக்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கனா ஒப்புதல் பெறுகிறார். தொடர்ந்து 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.



  • 09:10 (IST) 01 Feb 2023
    குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசு தலைவர் சந்திக்க புறப்பட்டார். தொடர்ந்து காலை 10 மணிக்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கனா ஒப்புதல் பெறுகிறார். தொடர்ந்து 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.



  • 09:02 (IST) 01 Feb 2023
    வருமான வரி உச்ச வரம்பு

    தற்போதைய நிலையில் வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சம்தான். இது உயர்த்தப்படுமா அல்லது வரி விகிதங்களில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.



  • 08:36 (IST) 01 Feb 2023
    12 % கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்

    அடுத்த வருடம் தேர்தல் வருவதால், கூடுதலாக சலுகைகள் அறிவிக்க வாய்ப்புள்ளது. நிர்மலா சீதாராமன் கல்வி, மருத்துவம், கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு 12 % கூடுதல் நிதி ஒதுக்குவார் என்று கருதப்படுகிறது.



  • 08:35 (IST) 01 Feb 2023
    அதிகரிக்கும் நிதி பற்றக்குறை

    நிதி பற்றாக்குறை கருத்தில் கொண்டால் எந்த வித வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க முடியாது என்பதால், மத்திய அரசு ஏழை மக்களுக்கு சில சலுகைகள் அளிக்க வாய்ப்புள்ளது. 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி, பெரும் நிறுவனங்களுக்கு அதிக வரிச்சலுகையை கொடுத்துள்ளார்.



  • 08:25 (IST) 01 Feb 2023
    உணவு தானிய உற்பத்தி

    காலை நிலை மாற்ற சவால்களைக் கடந்து 2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 31.57 கோடி டான்களை தொட்டது. 2022- 23 நிதி ஆண்டுக்கான முதல் மதிப்பீடுகளின் அடிப்படையில் 14.99 கோடி டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.பருப்பு வகைகளின் உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளைவிட அதிகமாகி உள்ளது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment