/tamil-ie/media/media_files/uploads/2020/05/a48.jpg)
"coronavirus, coronavirus cases, covid 19 tracker, covid 19 tracker india, india covid 19 tracker, corona cases in india, india corona cases, coronavirus cases in delhi, delhi coronavirus, delhi coronavirus cases, maharashtra coronavirus, mp coronavirus, tamil nadu coronavirus cases, haryana coronavirus, rajasthan coronavirus cases, delhi corona cases, கொரோனா வைரஸ், இந்தியாவில் கொரோனா, தமிழகத்தில் கொரோனா, gujarat coronavirus, gujarat coronavirus cases, gujarat coronavirus cases numbers
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ்பாதிப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன, கடந்த சில நாட்களாக வேகமாக வளர்ச்சி விகிதத்தைக் காண்பிக்கும் மாநிலங்கள் இவை.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிகபட்ச வைரஸ் பாதிப்புகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் கண்டறியப்பட்ட புதிய பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக அவை தொடர்ந்து பங்களிக்கின்றன. இருப்பினும், மகாராஷ்டிராவைத் தவிர, மற்ற நான்கு மாநிலங்களில் தற்போது வளர்ச்சி விகிதங்களை (7-நாள் சராசரி வளர்ச்சி) தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளன. மகாராஷ்டிராவும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை குறைந்த விகிதத்தில் வளர்ந்து வந்தது, ஆனால் கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் உருவாகி, அதன் விகிதம் இப்போது தேசிய சராசரியை விட சற்றே அதிகமாக இருப்பதை உறுதி செய்துள்ளது.
Explained: நிறுவனங்கள் சட்டம் ஏன் மாற்றப்படுகிறது?
மறுபுறம், பீகார் மற்றும் ஒடிசா ஆகியவை மிகக் குறைந்த பாதிப்புகளை கொண்டிருந்தன - பீகாரில் 1,600 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. ஒடிசா 1,100 மட்டுமே - ஆனால், கடந்த ஒரு பத்து நாட்களில் மிக வேகமாக விகிதத்தில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால், பிற மாநிலங்களில் உள்ள பணியிடங்களிலிருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் ஏராளமான தொழிலாளர்கள் மத்தியில் பல கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புதிய பாதிப்புகள் - மகாராஷ்டிரா அல்லது குஜராத் என ஒவ்வொரு நாளும் பதிவாகும் பாதிப்புகள் விட கணிசமாகக் குறைவாக இருந்தாலும் - குறைந்த அடித்தளத்தின் காரணமாக அதிக வளர்ச்சி விகிதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இமாச்சலப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களும் கூட சிறிய பாதிப்புகளை கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புதிய பாதிப்புகள் மீண்டும் எழுச்சி பெறுவதைக் குறிக்கின்றன. இந்த மாநிலங்களில் முன்னர் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் குணமடைந்துள்ளனர், நீண்ட காலமாக புதிய தொற்றுகள் எதுவும் இல்லை.
ஆனால் கடந்த வாரத்தில், இந்த இரண்டு மாநிலங்களும் பல புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளன. பாதிக்கப்பட்ட 41 பேரும் இமாச்சல பிரதேசத்தில் குணமடைந்துள்ளனர், ஆனால் கடந்த பத்து நாட்களில் 69 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்தம் 110 ஆக உள்ளது. இதேபோல், அசாமில் 43 கொரோனா பாதிப்புகளில் ஒவ்வொன்றும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து குணமடைந்து வருகின்றன, ஆனால் ஒரு புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, இப்போது மாநிலத்தில் மொத்தம் 170 வழக்குகள் உள்ளன. கோவாவில் அதன் முந்தைய ஏழு கொரோனா பாதிப்பு நபர்கள் குணமடைந்து வீட்டிற்குச் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக கடந்த ஒரு வாரத்தில் 43 புதிய வழக்குகளைஉறுதி செய்துள்ளது.
கொரோனா வைரஸ் - ஏன் தடுப்பூசி இன்னும் கைக்கு எட்டா தூரத்தில் உள்ளது?
முந்தைய நாளோடு ஒப்பிடும்போது புதன்கிழமை சற்றே குறைவான புதிய வழக்குகள் கண்டறியப்பட்டன. இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 1.12 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது, அவற்றில் சுமார் 43,000 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
தமிழ்நாடு, சில நாட்களாக அதன் தினசரி எண்ணிக்கையில் கண்ட சரிவுக்குப் பிறகு, புதன்கிழமை 743 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த பாதிப்புகள் 13,000 தாண்டியுள்ளது, அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் 40,000 வழக்குகள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.