Coronavirus Cases in India: ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகளை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர், கடந்த இரண்டு வாரங்களாக பெரும்பாலான நாட்களில் 100 முதல் 200 பாதிப்புகளை கண்டறிந்தது. ஞாயிற்றுக்கிழமை 620 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இப்போது 4,000 க்கும் மேற்பட்டபாதிப்புகள் மாநிலத்தில் உள்ளன. இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்கள் - மாறுபட்ட கணக்கீடுகளால் குழப்பம்
கடந்த பத்து நாட்களாக அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், ஹரியானாவில், ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 500 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட பாதி, 230, குருகிராமில் இருந்து பதிவாகியுள்ளன, இருப்பினும் மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை புதிய பாதிப்புகள் உள்ளன. சோனேபட்டில் 76 பாதிப்புகளும், ஃபரிதாபாத்தில் 56 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. இப்போது மொத்தமாக மாநிலத்தில் 4,448 நோய்த் தொற்றுகள் உள்ளன.
இந்த இரண்டும் வைரஸ் எழுச்சியின் அறிகுறிகளைக் காட்டும் ஒரே மாநிலங்கள் அல்ல. கடந்த வாரத்தில், பல மாநிலங்கள் அவற்றின் முந்தைய போக்கில் இருந்து விலகி, அதிக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை பதிவு செய்யத் தொடங்கியுள்ளன. மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, அசாம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், கோவா, திரிபுரா, மணிப்பூர் ஆகிய நாடுகள் அனைத்தும் தங்கள் வளர்ச்சி விகிதங்களில் அதிகரிப்பை காட்டுகின்றன. டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பற்றி பேசக்கூடாது, அவை அதிவேகமாக வைரஸ் பாதிப்புகளை கண்டறிந்து வருகின்றன. உத்தரபிரதேசம் கூட திங்களன்று 433 புதிய வழக்குகளைப் பதிவுசெய்தது, இதையடுத்து, ராஜஸ்தானுக்கு பதிலாக நாட்டில் ஐந்தாவது அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமாக மாறியுள்ளது உத்தர பிரதேசம்.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வளர்ச்சி விகிதம் மெதுவாக இருப்பதால் தேசிய வளர்ச்சி விகிதம் இன்னும் குறைந்து வருகிறது. ஆனால் அது மிக நீண்ட காலமாக இருக்காது. தேசிய அளவிலான பாதிப்பு எண்ணிக்கையில், இந்த மாநிலங்களின் பங்கு கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.
இருப்பினும், எண்ணிக்கை அதிகரிப்பு எதிர்பாராதது அல்ல. லாக்டவுன் விதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ரயில் மற்றும் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, முன்னர் தடைசெய்யப்பட்ட பல நடவடிக்கைகள் படிப்படியாக மறுதொடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. மே 15 க்குள், நாடு அதன் வளர்ச்சி விகிதத்தில் சீரான உயர்வைக் காணத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் வைரஸ் <பாதிப்பு குறைவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தேசிய வளர்ச்சி விகிதம் (ஏழு நாள் கூட்டு தினசரி வளர்ச்சி விகிதம்) இன்னும் குறைந்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமை இது 4.38 சதவீதமாக இருந்தது, இது மே முதல் வாரத்தில் 7 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது.
இருப்பினும், முழுமையான எண்ணிக்கையில், பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் 10,750 புதிய பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டில் மொத்த நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இப்போது இங்கிலாந்து, 2.87 லட்சம் பாதிப்புகளை பதிவு செய்து, உலகின் நான்காவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இருப்பினும், இங்கிலாந்தில் இதுவரை 40,600 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,000 மட்டுமே தாண்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.