இந்தியா கொரோனா வைரஸ் (கோவிட் -19)பாதிப்புகள்: நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தேசியளவில் பல மாநிலங்களில் ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பதாயிரம் வரை, வளர்ச்சி விகிதம் குறைந்துவருவது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
மே மாத தொடக்கத்தில், இந்தியாவில் தினசரி வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர் தொடர் சரிவைத் சந்திப்பதற்கு முன்பு இது சுமார் 7 சதவீதமாக உயர்ந்தது. செவ்வாயன்று, தேசிய வளர்ச்சி விகிதம் 4.67 சதவீதமாக இருந்தது.
ஆனால் மகாராஷ்டிரா மட்டும் குறைந்து வரும் பெரிய மாநிலம் அல்ல. உண்மையில், அதிகபட்ச பாதிப்புகள் கொண்ட முதல் ஐந்து மாநிலங்களில், டெல்லி மட்டுமே தற்போது தேசிய விகிதத்தை விட கணிசமாக உயர்ந்த விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இது கடந்த ஒரு வாரத்தில் 7,600 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. செவ்வாயன்று அதன் வளர்ச்சி விகிதம் 6.26 சதவீதமாக இருந்தது. தமிழகமும் வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் ஓரளவுக்கு மட்டுமே.
தனிநபர் இடைவெளி, முகக் கவசம்: கொரோனா பரவலை எந்த அளவுக்கு தடுக்கிறது?
மறுபுறம், குஜராத் மற்றும் ராஜஸ்தான், நான்காவது மற்றும் ஐந்தாவது அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலங்கள் முறையே 2.50 மற்றும் 3.21 சதவீத வளர்ச்சி விகிதங்களைக் கொண்டுள்ளன. பாதிப்புகளை பொறுத்தவரை அடுத்த பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசமும் இதே விகிதத்தில் வளர்ந்து வருகின்றன.
தேசிய விகிதத்தை விட வேகமாக வளர்ந்து வரும் பெரும்பாலான மாநிலங்களில் ஒப்பீட்டளவில் சிறிய பாதிப்புகள் உள்ளன. உண்மையில், கிட்டத்தட்ட 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இப்போது தேசிய விகிதத்தை விட அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் வளர்ச்சி விகிதங்கள் குறைவாக இருப்பதால் தேசிய வளர்ச்சி விகிதம் இன்னும் குறைகிறது.
செவ்வாயன்று, இந்தியாவில் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம் எண்ணிக்கையைத் தாண்டியது. நாடு முழுவதும் 8,500 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. அவற்றில் மகாராஷ்டிரா 2,300 க்கும் குறைவாகவேபதிவு செய்தது. தேசிய அளவிலான பாதிப்புகளில் மகாராஷ்டிராவின் பங்களிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருவதாக தெரிகிறது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை மகாராஷ்டிராவில் காணப்படுகின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களை விட இது கணிசமாக அதிகமாக இருந்தது, ஒவ்வொரு நாளும் மகாராஷ்டிரா புதிய பாதிப்புகள் 25 முதல் 35 சதவீதம் வரை உள்ளது. கடந்த ஒரு வாரத்தில், அந்த நிலை மீண்டும் ஒரு முறை எட்டப்பட்டது. ஜூன் 1 ம் தேதி, புதிய பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கையில் மகாராஷ்டிரா 30 சதவீத பங்களிப்பை வழங்கியது, செவ்வாயன்று இது வெறும் 26 சதவீதமாக குறைந்தது.
தெலுங்கானாவில் கொரோனா சோதனைகள் – கட்டை குதிரையுடன் உயர்நீதிமன்றம் ஒப்பிட்டது ஏன்?
இதன் பொருள் என்னவென்றால், இந்தியாவின் பிற பகுதிகள் இதற்கு முன்பிருந்ததை விட பல புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.
செவ்வாயன்று, டெல்லி மீண்டும் 1,300 புதிய பாதிப்புகளை பதிவு செய்தது, அதே நேரத்தில் ஹரியானா கிட்டத்தட்ட 300 புதிய தொற்றுகளை அறிமுகம் செய்தது. டெல்லியின் பாதிப்புகளில் பத்தில் ஒரு பங்கிற்கு சற்று அதிகமாக உள்ள ஹரியானா, சமீபத்திய நாட்களில் வேகமாக பாதிப்புகளை பதிவு செய்யும் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:India covid 19 growth rate of new cases slowing
கோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
குடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு!
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் !