சூப்பர் புயல்களால் இந்தியா, வங்கதேசத்தில் பெரும் பாதிப்பு? லேட்டஸ்ட் ஆய்வு எச்சரிக்கை

சூப்பர் சூறாவளிகளால் இந்தியா, பங்களாதேஷில் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு; ஆம்பன் புயல்களின் தரவுகளோடு புதிய ஆய்வு எச்சரிக்கை

சூப்பர் சூறாவளிகளால் இந்தியா, பங்களாதேஷில் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு; ஆம்பன் புயல்களின் தரவுகளோடு புதிய ஆய்வு எச்சரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சூப்பர் புயல்களால் இந்தியா, வங்கதேசத்தில் பெரும் பாதிப்பு? லேட்டஸ்ட் ஆய்வு எச்சரிக்கை

Super cyclones in India, Bangladesh: numbers exposed to severe flooding projected to rise hugely: சூப்பர் சூறாவளிகள் எதிர்காலத்தில் தெற்காசியாவில் உள்ள மக்கள் மீது மிகவும் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அசானி புயலை, கடுமையான சூறாவளி புயலாக வகைப்படுத்தி, புயலாக வலுவிழக்கும் என்று கணித்துக் கொண்டிருந்த, திங்களன்று ராயல் மீடியோராலஜிகல் சொசைட்டி இதழில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டது.

Advertisment

தெற்காசியாவில் கடுமையான நிலச்சரிவை ஏற்படுத்திய மிகப்பெரிய சூறாவளியான ஆம்பன் 2020 சூப்பர் சூறாவளியின் தரவுகளை, பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த விஞ்ஞானிகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி கவனித்து இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக கடல் மட்டம் உயரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் அதன் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

ஆய்வின் கண்டுபிடிப்புகள்: இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் சூறாவளிகளால் பாதிக்கப்படுபவர்களின் அளவைக் கணிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன காலநிலை மாதிரி கணிப்புகளைப் பயன்படுத்தினர். வளிமண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியீடு இதே அளவில் தொடர்ந்தால், 2020 நிகழ்வில் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள் தொகையை விட, இரண்டரை மடங்குக்கும் (250%) அதிகமான மக்கள் 1 மீட்டர் அளவுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கண்டறிந்தனர்.

பங்களாதேஷில், ஆபத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மிகவும் சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 60% முதல் 70% வரை உயர்வு இருக்கும். இருப்பினும், இது எதிர்காலத்தில் கடலோர மக்கள் தொகை குறைவதற்கான காரணிகளாகும்.

Advertisment
Advertisements

தொழில்துறையின் முந்தைய நிலைகளுக்கு பாரிஸ் ஒப்பந்தத்தின் காலநிலை இலக்குகளான 2 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல் குறைப்புக்கு, பங்களாதேஷ் இணங்கினால், அந்த நாட்டில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்படுவது பூஜ்ஜியத்திற்கு அருகில் குறையும். ஆனால் இந்தியாவில், இந்த சூழ்நிலையில் கூட, பாதிப்புகள் இன்னும் ஆபத்தான அதிகரிப்பைக் காட்டியுள்ளன. 2020 உடன் ஒப்பிடும்போது 50% முதல் 80% வரை அதிகமான மக்கள் எதிர்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்துக் கொள்ள வேண்டியவை: ஆய்வு "பாரிஸ் உடன்படிக்கையின் காலநிலை இலக்குகளை அடைய நமது பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கு ஆதரவாக ஒரு முக்கியமான ஆதாரத்தை முன்வைக்கிறது, அங்கு மற்ற சான்றுகள் பெரும்பாலும் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் தாக்கங்கள் குறைவாக இருக்கும் மற்றும் மாற்றங்கள் எளிதில் அடையக்கூடியது”, என்று காலநிலை அறிவியல் பேராசிரியரும் முன்னணி எழுத்தாளருமான டேன் மிட்செல், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஊடக வெளியீட்டில் மேற்கோள் காட்டினார்.

இதையும் படியுங்கள்: போலீஸ் விசாரணைக்கு ஆதார் டேட்டாவை பயன்படுத்த முடியாது… UIDAI சொல்லும் காரணம் என்ன?

பங்களாதேஷ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நீரியல் பேராசிரியரும், ஆய்வின் பங்களிப்பாளருமான சைஃபுல் இஸ்லாம், "... பங்களாதேஷ் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் இழப்புகள் மற்றும் சேதங்களை குறைக்கவும், பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடையவும், விரைவான மற்றும் நீடித்த பசுமை இல்ல வாயுக் குறைப்பு அவசியம்” என்று கூறினார்.

ஆய்வு வெளியீடு: டேன் மிட்செல் மற்றும் பலர், 'எதிர்கால காலநிலையின் கீழ் ஆம்பன் அளவிலான சூறாவளிகளுக்கு மக்கள் தொகை அதிகரிப்பு', காலநிலை மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை. rmets.onlinelibrary.wiley.com/doi/full/10.1002/cli2.36

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cyclone India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: