இரவு உணவு எப்படி எந்த அளவு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் காலையில் ஜீரண கோளாறுகள் வரக்கூடாது என்பதற்காக. அதும்ட்டுமின்றி நிறைய பேர் இரவில் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் அதிகம் சாப்பிடுவது தவறான நேரத்தில் சாப்பிடுவது என்று இருப்பார்கள்.
அப்படி இருப்பவர்களுக்கு காலையில் மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வரும். அந்தமாதிரியான பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கும் டாக்டர் நித்யா கூறியிருப்பதாவது,
இரவில் எளிதாக ஜீரணமாகும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இரவு 8 மணிக்குள் உணவை சாப்பிட்டு விட வேண்டும்.
எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். தானியங்கள் குறைவாக சாப்பிடலாம். இரவில் சர்க்கரை நோயாளிகள் பழம் சாப்பிட கூடாது. சிறுதானிய உணவுகளை கஞ்சி மாதிரி எடுத்து கொள்ளலாம்.
இன்று இரவு இதை செய்து சாப்பிட்டு பாருங்க - ஆரோக்கியம் தரும் இரவு உணவு |speech on healthy food diet
இதனால் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் இருக்கும். இரவு உணவு எடுத்து அரைமணி நேரம் கழித்து பால் குடிக்கலாம். அதில் கடுக்காய் பொடி, சுக்கு போடி போன்றவை கலந்து சாப்பிடலாம்.
இரவில் அதிக உணவு சாப்பிடக்கூடாது. துரித உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். அதேபோல 8 மணிக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.
இந்த முறையில் உணவுகளை எடுத்து கொண்டால் நல்ல உறக்கமும் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது என்றும் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.