எண்ணெய் கடலை பருப்பு தனியா சீரகம் பூண்டு புளி கறிவேப்பிலை மிளகாய் தூள் கல் உப்பு பெருங்காய தூள் பொடித்த வெல்லம் பாகற்காய் உப்பு மஞ்சள் தூள்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய், கடலை பருப்பு, தனியா மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வறுக்கவும். வறுத்தவுடன் பூண்டு, புளி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுப்பை அணைத்து, ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும்.
Advertisment
Advertisements
வறுத்த பொருட்களுடன் மிளகாய் தூள், கல் உப்பு, பெருங்காய தூள், வெல்லம் சேர்த்து மிக்சி ஜாடிக்கு மாற்றி தூளாக அரைத்து கொள்ளவும். அரைத்த பூண்டு மசாலாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இப்போது ஒரு கிலோ பாகற்காய்களை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, பெரிய விதைகளை அகற்றி, அவற்றில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் சேர்த்து, பாகற்காய் துண்டுகளை சேர்க்கவும். தீயை மிதமாக வைத்து பதினைந்து நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும். இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் சேர்த்து, பாகற்காயுடன் மசாலாவை வேக விடவும். தொடர்ந்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.