சுவையான பாகற்காய் கொஞ்சம் கூட கசப்பு தெரியாமல் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த மாதிரி செய்தால் பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட உடனே சாப்பிட்டு விடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 3 தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 15 பற்கள்
புளி
கறிவேப்பிலை
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
கல் உப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் - 1 தேக்கரண்டி
பாகற்காய் - 1 கிலோ
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
அரைத்த பூண்டு மசாலா
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய், கடலை பருப்பு, தனியா மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வறுக்கவும். வறுத்தவுடன் பூண்டு, புளி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுப்பை அணைத்து, ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும்.
வறுத்த பொருட்களுடன் மிளகாய் தூள், கல் உப்பு, பெருங்காய தூள், வெல்லம் சேர்த்து மிக்சி ஜாடிக்கு மாற்றி தூளாக அரைத்து கொள்ளவும். அரைத்த பூண்டு மசாலாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இப்போது ஒரு கிலோ பாகற்காய்களை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, பெரிய விதைகளை அகற்றி, அவற்றில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் சேர்த்து, பாகற்காய் துண்டுகளை சேர்க்கவும். தீயை மிதமாக வைத்து பதினைந்து நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும். இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் சேர்த்து, பாகற்காயுடன் மசாலாவை வேக விடவும். தொடர்ந்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாற சுவையான பாகற்காய் மசாலா வறுவல் தயார்.