ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பவ்சர், உலர்ந்த உணவுப் பொருட்கள் உங்களின் வாத தோஷத்தை அதிகரிக்கலாம் மற்றும் இரைப்பை பிரச்சனைகளை அதிகரிக்கலாம் என்பதால், திராட்சையை சாப்பிடுவதற்கு முன் ஊறவைக்க பரிந்துரைக்கிறார்.
திராட்சை இந்தியாவில் உள்ள இனிப்பு வகைகளில் மறுக்க முடியாத பகுதி. இனிப்புகள் மற்றும் குறிப்பாக பண்டிகைகளின் போது அதிகமாகப் பயன்படுத்தப்படும், வழக்கமான திராட்சைகள் பொதுவாக அடர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், கருப்பு நிற உலர் திராட்சையை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
அவை கடிக்கும் அளவுக்கு சுருக்கமான தோலுடன் சுவையுடன் உட்புறம் ஜூசியாக இருக்கும். கருப்பு உலர் த் இராட்சை முடி உதிர்வைக் குறைப்பது, இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்குவது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது முதல் இரத்த சோகையைத் தடுப்பது வரை, கருப்பு திராட்சை உங்கள் உணவில் ஒரு அற்புதமான கூடுதலான ஒன்றாக இருக்கும். ஏனெனில், அவை இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன, இரும்புச்சத்து நிறைந்தது என்று ஆயுர்வேத நிபுணர் டிக்சா பாவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.
உலர்ந்த உணவுப் பொருட்கள் உங்களின் வாத தோஷத்தை அதிகரிக்கலாம் மற்றும் "இரைப்பை பிரச்சனைகளை" ஊக்குவிக்கலாம் என்பதால், திராட்சையை சாப்பிடுவதற்கு முன் ஊறவைக்க டாக்டர் பாவ்சர் பரிந்துரைத்துள்ளார். திராட்சையை ஒரு இரவு மட்டும் ஊறவைப்பது, ஜீரணிக்க எளிதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
கருப்பு உலர் திராட்சை ஆயுர்வேதத்தின் படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. நிபுணர்களின் கருத்துப்படி இங்கே சில உள்ளன.
எலும்பு பலவீனமாவதைத் தடுக்க உதவும்
கருப்பு திராட்சை பொட்டாசியத்தின் வளமான ஆதாரமாக உள்ளது. இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
நரை முடி மற்றும் முடி உதிர்வைக் குறைக்கும்
கருப்பு திராட்சையில் இரும்புச்சத்து மட்டுமின்றி அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது உடலில் உள்ள தாதுக்களை விரைவாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்
வயது அல்லது வாழ்க்கை முறை பிரச்சினைகளைப் பொறுத்து, உலகில் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இது பொட்டாசியம் இரத்தத்தில் சோடியத்தை குறைக்க உதவுகிறது என டாக்டர் பாவ்ஸரின் கருத்துப்படி கருப்பு திராட்சையை உட்கொள்வது ரத்த அழுத்தத்தை கடுக்குள் வைத்திருக்க உதவும்.
இரத்த சோகையைத் தடுக்கும்
திராட்சைகள் பொதுவாக இரும்பு மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் ஆகியவற்றின் வளமான ஆதாரமாகும். இது இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சில திராட்சைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை அறிகுறிகளைத் தடுக்கலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலுக்கு எதிராகப் போராடுகிறது
கருப்பு திராட்சை இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது என்று டாக்டர் பாவ்சர் கூறினார். எல்டிஎல் கொலஸ்ட்ராலை மருத்துவத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது. சாதாரண செயல்பாடுகளைச் செய்ய இதயத்தின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சில கருப்பு திராட்சைகளை உட்கொள்வது சிறந்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது
கருப்பு திராட்சை வாய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. திராட்சையை சாப்பிடுவது, பல் சிதைவில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, திராட்சைகளில் ஐந்து பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் தாவர ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இதில் ஓலியானோலிக் அமிலங்கள் அடங்கும். கருப்பு உலர் திராட்சை பல் சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.
கருப்பு திராட்சை அதிக அளவு உணவு நார்ச்சத்துக்காக அறியப்படுகிறது. இது மலத்தை மொத்தமாக வெளியெற்றக்கூடியது என்று டாக்டர் பாவ்சர் கூறினார். நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து உடனடியாக நிவாரணம் அளிப்பதாக அறியப்படுகிறது. இது பல ஆண்டுகளாக் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு திராட்சையின் வேறு சில நன்மைகள்:
*மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது.
*ஆற்றல் நிலைகளை மேம்படுத்துகிறது.
*நெஞ்செரிச்சலை (அசிடிட்டி) குறைக்க உதவுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.