தேவையான பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு
சர்க்கரை
ஏலக்காய் பொடி
தேங்காய் துருவல்
செய்முறை
மரவள்ளி கிழங்கின் மேல் தோலை நீக்கி கழுவி அதை சீவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அந்த கிழங்கில் உள்ள பாலை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதில் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
மரவள்ளிக்கிழங்கு இருந்தா சுடச்சுட இப்படி செய்து கொடுங்க சூப்பரா இருக்கும்
அதற்கு ஒரு சிறய கப்பில் தேங்காய் துருவல் சேர்த்து அதற்கு மேல் இந்த மரவள்ளிக்கிழங்கு சேர்த்து மீண்டும் மேலே தேங்காய் துருவல் சேர்த்து வேக வைக்கவும்.
இதனை சிறிய பாத்திரம் அல்லது இட்லி தட்டில் வைத்து புட்டு வேக வைப்பது போல வைக்க வேண்டும்.
வேக வைத்து எடுத்து புட்டு மாதிரியான ஒரு பதத்திற்கு வந்ததும் அதை எடுத்து பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“