வேர்க்கடலை ஒரு சத்தான உணவு. தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். இது இதய நோய்களைத் தடுக்கவும், இரத்தக் கட்டிகள் உருவாவதைக் குறைக்கவும் உதவும். வேர்க்கடலையில் புரதமும், கொழுப்பும் நிறைந்துள்ளதால், இது எடை குறைப்பிற்கும், இதய நோய் மற்றும் பித்தப்பை கற்கள் அபாயத்தைக் குறைப்பதற்கும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடனடியாகத் தண்ணீர் குடிக்கும்போது, உணவு சரியாக ஜீரணமாகாமல் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வயிற்று வலி, வாயுத் தொல்லை, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகள் ஏற்படலாம் என்றும், உடல் வெப்பநிலை மாறுபாட்டால் சளி மற்றும் இருமல் வரலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வேர்க்கடலையில் கணிசமான அளவு எண்ணெய் சத்து உள்ளது. உடனடியாக தண்ணீர் குடிப்பதால், இந்த எண்ணெய் உணவுக் குழாயில் படிந்து எரிச்சல் அல்லது இருமலை ஏற்படுத்தக்கூடும் என்று சிலர் நம்புகின்றனர். நட்ஸ் அல்லது அதிக எண்ணெய் சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது உணவுக் குழாயில் கொழுப்பு படியும் வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வேர்க்கடலை ஒரு 'சூடான' உணவாகக் கருதப்படுகிறது. இதைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது உடலில் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு சளி அல்லது இருமலை ஏற்படுத்தலாம். நட்ஸ் ஒவ்வாமை (allergy) இருந்தால் வேர்க்கடலையைத் தவிர்ப்பது நல்லது.
ஒருவேளை சாப்பிட்டுவிட்டால், அதற்குப் பிறகு தண்ணீர் குடிக்கும்போது மூச்சுத்திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். வேர்க்கடலை உட்பட எந்த உணவையும் சாப்பிட்ட பிறகு உடனடியாக தண்ணீர் குடிப்பது, செரிமானச் செயல்முறையை மாற்றியமைத்து வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.