உணவில் அதிக உப்பு? எச்சரிக்கும் நிபுணர்கள்.. உப்புக்கு மாற்று என்ன?

உணவில் அதிகப்படியான உப்பு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

உணவில் அதிகப்படியான உப்பு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உணவில் அதிக உப்பு? எச்சரிக்கும் நிபுணர்கள்.. உப்புக்கு மாற்று என்ன?

உப்பு இல்லாமல் உணவை சாப்பிட முடியுமா? யோசித்து பார்க்க முடிகிறதா? உப்பு ஒரு உணவின் சுவையை அதிகரிக்க உதவுகிறது. சிறிது உப்பு குறைவாக இருந்தாலும் டேஸ்டு இல்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுகிறோம். ஆனால் அதே உப்பு அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடல் பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

ஆம், நம் உணவில் அதிகப்படியான உப்பு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அது நீண்ட காலத்திற்கு கவனிக்கப்படாமல் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.

ஊட்டச்சத்து நிபுணர் சோனியா பக்ஷி கூறுகையில், உணவில் அதிகப்படியான சோடியம் திடீர் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும். சிறுநீரகங்கள் நமது உடலில் குறிப்பிட்ட அளவு சோடியம் மற்றும் நீர் விகிதத்தை பராமரிக்கிறது. கூடுதல் சோடியம் உட்கொள்வது கூடுதல் நீரை பருக வைக்கும். அந்தவவையில் அதிகம் சோடியம் உள்ள உணவு சாப்பிட்ட பிறகு வயிறு உப்பி இருக்க இதுவே காரணம் என்றார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, அதிகம் சோடியம் உட்கொள்ளுதல் மற்றும் குறைந்த
பொட்டாசியம் உட்கொள்ளுதல் உயர் இரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
அதன்படி, அதிக சோடியம் உட்கொள்ளுதல் (>2 கிராம்/நாள், 5 கிராம் உப்பின் அளவு) மற்றும் போதுமான பொட்டாசியம் உட்கொள்ளாமல் இருத்தால் நாள் ஒன்றுக்கு 3.5 கிராமுக்கும் குறைவாக உட்கொள்ளுதல் உயர் இரத்த அழுத்த பாதிப்பு, இதய நோய் ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.

Advertisment
Advertisements

நமது உடலுக்கு சோடியம் எவ்வாறு கிடைக்கிறது?

நமது உடலில் சோடியம் உணவில் சேர்க்கப்படும் உப்பின் மூலம் கிடைக்கிறது. எனவே உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுவது நல்லது. எதிர்காலத்தில் உடல் பிரச்சனைகளை தவிர்க்க உதவும் என்று கூறுகின்றனர்.

உணவில் உப்பு சேர்த்தாலும், அது அயோடின் (Iodine) அல்லது செறிவூட்டப்பட்டதாக இருக்க வேண்டும். அயோடின் குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சியை மேம்படுத்தும், பொதுவாக மன செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு அவசியமானது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர் லப்னீத் பத்ரா உப்புக்கு மாற்றாக சிலவற்றை பரிந்துரைத்தார். நம் உடலில் சோடியம் அளவை அதிகரிக்காமல் அதேவேளையில் உணவில் சுவை சேர்க்கக்கூடிய சில உப்பு மாற்றுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு ஒரு சிறந்த உப்பு மாற்றாகும். எலுமிச்சை சாறு உணவில் சேர்க்கும்போது உப்பைப் போலவே செயல்படுகிறது. எலுமிச்சை பழம் கூடுதலாக சிட்ரஸ் சுவைக்கு பங்களிக்கிறது.

பூண்டு

பூண்டின் பெரும்பாலான ஆரோக்கிய பண்புகள் அல்லிசின் என்ற கலவை காரணமாகும், இது அதன் தனித்துவமான வாசனைக்கும் காரணமாகும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பூண்டு சோடியத்தை அதிகரிக்காமல் சுவையை அதிகரிக்கிறது.

கருப்பு மிளகு

கருப்பு மிளகு உணவின் சுவையை அதிகரிக்கும். கூடுதலாக, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான நோய்களுடன் தொடர்புடைய வீக்கங்களைக் குறைக்க உதவும் என்கின்றார்.

மாங்காய் தூள் (அம்சூர்)

ஆம்சூர் என்றும் அழைக்கப்படும் மாங்காய் தூள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மசாலாப் பொருளாகும். மேலும் இது உப்புக்கு சிறந்த மாற்றாகும். ஆம்சூர் தூள் சூப், சட்னி, குழம்பு, பருப்பு போன்றவற்றில் சேர்க்கலாம். இது உப்பின் அதே சுவையை தருகிறது. ஆனால் உப்பின் பக்கவிளைவுகள் இல்லாமல் தருகிறது என்று சோனியா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tips Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: