தினமும் உலர் பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
குளிர்காலத்தில் முந்திரி, பிஸ்தா, பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களை மக்கள் உட்கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த பருவத்தில் உலர்ந்த பேரீச்சம்பழம் சாப்பிடுவது மற்ற உலர்ந்த பழங்களை விட அதிக நன்மை பயக்கும் என்பது பலருக்குத் தெரியாது. குளிர்காலத்தில் தினமும் இரண்டு பேரீச்சம்பழங்களை மட்டும் சாப்பிடுவது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சொல்லப்போனால் பாலுடன் சேர்த்து சாப்பிடுவது இன்னும் பலன் தரும்.
இதையும் படியுங்கள்: காலையில் வெறும் வயிற்றில் 30 மி.லி இந்த ஜூஸ்… சுகர் பிரச்னைக்கு எண்ட் கார்டு!
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்
உலர் பேரீச்சம்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழங்களை எடுத்து பாலில் கொதிக்க வைக்கவும். இந்த பாலை காலை உணவுடன் அல்லது இரவு தூங்கும் முன் சாப்பிடுங்கள். உங்கள் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
குளிர்காலத்தில் நமது செரிமான அமைப்பு மிகவும் மெதுவாக இருக்கும். இதன் விளைவாக, உணவுக்குப் பிறகு மக்கள் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். உலர் பேரீச்சம்பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு பேரிச்சம்பழம் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இரண்டு பேரீச்சம்பழத்தை பாலில் கொதிக்க வைத்து தொடர்ந்து குடிக்கவும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பல்வேறு பருவகால நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
இருமல் மற்றும் சளிக்கு தீர்வு
வெப்பநிலை மாறும்போது, இருமல் மற்றும் சளி பிரச்சனை பொதுவானது. படிப்படியாக, தலைவலி, காய்ச்சல் மற்றும் பலவீனம் போன்ற மற்ற அறிகுறிகளும் எழுகின்றன. பேரீச்சம்பழம் சாப்பிடுவது நம் உடலை வெப்பமாக்குகிறது, இதனால் இந்த பொதுவான பிரச்சனைகள் சரியாகும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil