கடுக்காய் என்பது நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பும் எவருக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். மூளை, இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், செரிமான அமைப்பு மற்றும் நரம்பு மண்டலம் போன்ற உடலின் முக்கிய உறுப்புகளை வலுப்படுத்த கடுக்காய் உதவுகிறது. இது வெறும் மருந்தாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த காயகல்ப மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது என்று டாக்டர் கௌதமன் கூறியதையடுத்து கடுக்காய் பொடி எப்படி செய்வடு என்று பார்ப்போம்.
Advertisment
வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கலுக்கு: ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், விரைவிலேயே நல்ல பலன்களைக் காணலாம்.
கடுக்காய் கஷாயம்: ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடியை 300 மில்லி தண்ணீரில் சேர்க்கவும். இந்த கலவையை 100 மில்லி ஆகும் வரை நன்கு சுண்டக் காய்ச்சவும். பின்னர் வடிகட்டி, இந்தக் கஷாயத்தை குடிக்கவும்.
பண்டைய காலங்களில், கடுக்காய் கஷாயம் ஒரு சக்திவாய்ந்த கிருமி நாசினியாகப் பயன்படுத்தப்பட்டது. காயங்களைச் சுத்தம் செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையில் கடுக்காயை ஒரு முக்கிய பகுதியாகக் கொண்டிருந்தனர்.
Advertisment
Advertisements
கடுக்காய் பொடி செய்முறை: விதைகளை நீக்கிய கடுக்காயின் மேல்தோலை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். மிக்ஸி ஜார் முற்றிலும் சுத்தமாகவும் காய்ந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஈரப்பதம் இருந்தால் பொடி கெட்டுப்போக வாய்ப்புள்ளது. உங்களுக்கு அதிக அளவில் கடுக்காய் பொடி தேவைப்பட்டால், நீங்கள் அதை ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம். அரைத்த கடுக்காய் பொடியை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் சேமித்து வைக்கவும். இது பொடியின் புத்துணர்வையும், பலன்களையும் நீண்ட நாட்கள் பாதுகாக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.