30 நோய்களை விரட்டும் இந்த 3 மூலிகைகள்... இப்படி ரெடி செய்து வச்சு யூஸ் பண்ணுங்க: டாக்டர் கௌதமன் டிப்ஸ்
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக நிர்வகிக்கவும் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலந்த பொடி உதவி செய்கிறது என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக நிர்வகிக்கவும் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலந்த பொடி உதவி செய்கிறது என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
சில வகையான மூலிகைகளை உணவாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் தமிழர்களிடம் இருக்கிறது என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். அந்த வகையில், மூலிகைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை தமிழ் ஜனம் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் காணலாம்.
Advertisment
அதனடிப்படையில், கருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் ஓமம் ஆகிய பொருள்களுக்கு எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இவை மூன்றையும் சம அளவில் பொடியாக்கி எடுத்துக் கொள்வது காயகல்ப மருந்தாக செயல்படுகிறது என்று அவர் அறிவுறுத்துகிறார்.
மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதற்கு இதனை விட சிறந்த மருந்து இல்லை என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். வயிற்றில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் முழுமையாக வெளியேற இவை உதவி செய்கிறது. இந்தப் பொடியை தினசரி காலை நேரத்தில் 5 கிராம் அளவில் சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
மேலும், வயிற்றில் இருக்கும் வாதம் மற்றும் அமிலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இவை மருந்தாக அமைகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இதனை எடுத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையையும் இது சீரமைக்கிறது.
Advertisment
Advertisements
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக நிர்வகிக்கவும் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலந்த பொடி உதவி செய்கிறது என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு தேக்கரண்டி அளவில் காலை மற்றும் மாலையில் உணவுக்கு முன்பாக இந்தப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
இவை மட்டுமின்றி இரத்த சோகை, முடி உதிர்வு, சிறுநீரக பிரச்சனை உள்ளிட்ட 30 வகையான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைகளுக்கு இருக்கிறது என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.