சங்க இலக்கியத்தில் குறிப்பு... அரிசியை விட 8 மடங்கு இரும்புச்சத்து இருக்கு; இந்த சிறுதானியம் கிடைத்தால் விடாதீங்க: டாக்டர் கார்த்திகேயன்
சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பு குறித்த பல்வேறு தகவல்களை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கம்பில் இருக்கும் எண்ணற்ற பயன்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பு குறித்த பல்வேறு தகவல்களை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கம்பில் இருக்கும் எண்ணற்ற பயன்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
சிறுதானிய வகைகளில் மிக முக்கியமானதாக கம்பு விளங்குகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இது தொடர்பான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். இதில் அரிசியை விட 8 மடங்கு இரும்புச் சத்து அதிகம் என்று கூறும் கார்த்திகேயன், பல்வேறு தகவல்களை தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
Advertisment
கம்பு ஒரு சத்தான தானியம். ஒரு கப் (160 கிராம்) கம்பில் 201 கலோரிகள், 6 கிராம் புரதம், 1.7 கிராம் கொழுப்பு, 40 கிராம் மாவுச்சத்து மற்றும் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும், இரும்புச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், தயமின், நியாசின், பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் வைட்டமின் பி6 மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
இது செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். இதனால் பசி குறையும் மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் கம்பு சிறந்த உணவு. கம்பு குளுட்டன் இல்லாதது. அரிசிக்கு பதிலாக கம்பை பயன்படுத்தலாம்.
கம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அலர்ஜி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும். கம்பின் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்தாது.
Advertisment
Advertisements
இதில் கூழ், தோசை, சாதம், அவல், பொரியல் மற்றும் பிரியாணி கூட செய்யலாம். நீரிழிவு நோயாளிகள் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் சப்பாத்திக்கு பதிலாக கம்பு ரொட்டி அல்லது கம்மஞ்சோறு சேர்த்துக்கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் கம்பஞ்சோறு, புழுங்கல் அரிசி சோறு, தினை சாதம், கேழ்வரகு அடை, வரகரிசி தோசை, சோள தோசை மற்றும் குதிரைவாலி இட்லி போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஊட்டச்சத்துக்களைப் பெறலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.