எலும்புகளை வலுப்படுத்தி ஆர்த்ரிடிஸ் வராமல் தடுக்கும்; இந்த பூவில் டீ போட்டு குடிங்க; டாக்டர் மைதிலி
பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் காகிதப் பூக்களின் நன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் காகிதப் பூக்களின் நன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
பல்வேறு இடங்களில் அழகுக்காக காகிதப் பூக்களை வளர்ப்பார்கள். பல வண்ணங்களில் இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், அழகையும் தாண்டி இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்து தன்மை இருப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில், சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்றவற்றுக்கு இது மருந்தாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காகிதப் பூக்களில் இருந்து தேநீர் தயாரித்து குடிக்கும் போது இந்தப் பாதிப்புகள் குறையத் தொடங்கும்.
ஆர்த்ரிடிஸ் போன்ற நோய் பாதிப்புகள் வராமல் தடுக்கும் வகையில் எலும்புகளை உறுதியாக்கும் ஆற்றல் காகிதப் பூக்களுக்கு இருக்கிறது. இது தவிர இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் இது பயன்படுகிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 15 காகிதப் பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக சுத்தம் செய்த பின்னர், அதன் நடுப்பகுதியில் இருக்கும் வெள்ளை நிறத்தை மட்டும் நீக்க வேண்டும். இதனை மூன்று கிளாஸ் தண்ணீரில் போட்டு அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த தண்ணீர் ஒரு கிளாஸ் அளவில் குறைந்ததும், வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகலாம் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். இதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். மேலும், நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் டீ, காபி போன்றவற்று மாற்றாகவும் இதை பயன்படுத்தலாம்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.